districts

img

எல்ஐசி பங்குகளை கார்ப்பரேட்களுக்கு விற்பதை கைவிடுக!

மதுரை, ஜூலை 11- சிஐடியு எல்ஐசி முகவர்  கள் சங்க மதுரை கோட்ட  6 ஆவது மாநாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி காமராஜர் வளாகம் தோழர் ஆர். கரு ணாகரன் நினைவு அரங்கில் சனிக்கிழமையன்று நடை பெற்றது.  மாநாட்டிற்கு கோட்டத் தலைவர் எஸ். கே. சுப்பிர மணியராஜா தலைமை வகித்  தார். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் பழனி நகர் மன்ற துணைத் தலைவர் கே. கந்தசாமி வரவேற்றுப் பேசி னார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜெ. மோகனா துவக்கி வைத்துப் பேசி னார்.  ஜனநாயக மாதர் சங்க  மாநிலச் செயலாளர் -முன்  னாள் சட்டமன்ற உறுப்பி னர் கே.பாலபாரதி, லிக்காய்  தென்மண்டல செயல் தலை வர் எம்.செல்வராஜ், அகில  இந்திய செயற்குழு உறுப்பி னர் எம்.ஆர்.வெங்கட் நாரா யண ராஜா, கோட்டத் துணைச்  செயலர் எஸ்.பிரபாகரன் சத்தியசீலன், என்.எப்.ஐ.எப். டபுள்யூஐ கோட்ட இணைச்  செயலாளர் ஆர்.ஜனார்த்த னம், ஏஐஐஇஏ கோட்டத் துணைத் தலைவர் எஸ்.ஏ.டி. வாஞ்சிநாதன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். வரவேற்  புக்குழுச் செயலாளர் லிக் காய் கே.இளங்கோ நன்றி கூறினார். பிரதிநிதிகள் மாநாடு கோட்ட தலைவர் எஸ்.கே. சுப்பிரமணியராஜா தலை மையில் நடைபெற்றது. கோட்ட செயல் தலைவர் டாக்  டர் சுப்பையா வரவேற்றுப் பேசினார். மாநிலச்செயலா ளர் பி.ராஜேஷ் துவக்கி வைத்து பேசினார். கோட்டச் செயலாளர் கே.மாரி வேலை  அறிக்கையும், பொருளாளர் ஏ.அருள்தாஸ் வரவு - செலவு  அறிக்கையும் சமர்ப்பித்த னர். தென் மண்டலத் தலைவ ரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.வி.பெல்  லார்மின் நிறைவுரையாற்றி னார். பழனி கிளை பொருளா ளர் பி.பரமசிவம் நன்றி கூறி னார். 

புதிய நிர்வாகிகள் 

மாநாட்டில் புதிய நிர்  வாகிகள் தேர்வுசெய்யப்பட் டனர். கோட்டத் தலைவராக எஸ்.கே.சுப்பிரமணியராஜா, செயலாளராக கே.மாரி, பொருளாளராக ஏ.அருள் தாஸ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். ஒன்றிய அரசு எல்ஐசி யின் பங்குகளை தனியார்  கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும், பொதுத்துறைகளை தனி யார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும். பெட்ரோல், டீசல்,  கேஸ், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.  முகவர்களுக்கு குறைந்த  பிரீமியத்தில் வயதுவரம் பில்லாத குழுக்காப்பீடுடுத் தொகை ரூ .25 இலட்சமாக வழங்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ  காப்பீடு திட்டம் குடும்பத்துக் கும் சேர்ந்து வழங்க வேண்  டும். அனைத்து முகவர் களுக்கும் கேரளாவை போல் சேமநலநிதி வழங்க வேண்டும். கிராஜுவிட்டி ரூ. 10 லட்சமாக வழங்க வேண்  டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.