திண்டுக்கல், மே 23- ஐந்து ஆண்டுகளாக திறக்காத கிராம நூலகத்தை திறக்க வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். வேடசந்தூர் அருகேயுள்ளது ரெங்கநாத புரம். இந்த ஊரில் உள்ள கிராம நூலகம் ஐந்து ஆண்டுகளாக திறக்காமல் பூட்டப் பட்டுள்ளது. கல்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த நூலகம் குறித்து பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனையடுத்து வாங்கலாபுரம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப் பட்டது. மேலும் காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். சர்வீஸ் சாலையில் இடிந்த பாலத்தை சரி செய்ய வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும். ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு குடிநீர் ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கியி ருந்து சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் கையெ ழுத்து இயக்கத்தில் முன் வைக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளைத்தலைவர் புவனேஷ்வரி நிர்வாகி கள் புகழேந்தி, அஸ்வின், சுப்பிரமணி (வி.ச) ஆகியோர் பங்கேற்றனர்.