districts

img

ஆர்எஸ்எஸ் முகாமிற்கு தடை விதிக்க கோரி இடதுசாரி மாணவர் -வாலிபர் அமைப்பினர் போராட்டம்

கைது செய்து காவல்துறையினர் அராஜகம்

தேனி,ஜூலை .15- அக்னிபாத் திட்டத்திற்கு ஆள் எடுக்கும் வகையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு  நடத்தும் பயிற்சி முகாமிற்கு தடை கோரி முற்றுகை போ ராட்டத்தில் ஈடுபட்ட   இடது சாரி மாணவர் -வாலிபர் அமைப்பினரை  கைது செய்து காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் .  ஆர்எஸ்எஸ் அமைப் பின் கீழ் செயல்படும் பாரதீய பண்பாட்டு சேவா கேந்திரம் என்ற அமைப்பு வீரபாண்டி யில் உள்ள தேனி சௌ ராஷ்டிரா கலை அறிவியல் கல்லூரியில்  அக்னிபாத், அகனிவீர் ஆகிய திட்டங்க ளுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்துவதாக கூறி தமிழகம் முழுவதும் வாலி பர்களை திரட்டி வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பாரதீய  பண்பாட்டு சேவா கேந்திரம்   என்ற சங் பரிவார் அமைப்பு மாணவர்கள், வாலிபர்களை திரட்டி முகாம் என்ற பெயரில் நச்சு விதைகளை விதைத்து வருகிறது.

தேனி அருகே  வீரபாண்டியில் இயங்கி வரும் தேனி செளராஷ்டிரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் பயிற்சி முகாம் நடத்து வதை நிறுத்திடக் கோரி தேனி  ஆட்சியர், காவல் கண்கா ணிப்பாளர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோ ருக்கு புகார் அளித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை . எனினும் தமிழகம் முழு வதும் 400 -க்கும் மேற்பட்ட வாலிபர், மாணவர்களை திரட்டி வெள்ளிக்கிழமை முதல் கல்லூரியில்  பயிற்சி முகாம் நடைபெற்று  வரு கிறது. நடவடிக்கை எடுக்காத நிலையில் பயிற்சி முகாமிற்கு தடை விதிக்க வேண்டும், கல்லூரி நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி  இடது சாரி வாலிபர், மாணவர் அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்த திரண்டனர். தேனி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் துணை காவல் கண்காணிப் பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். போராட்டத்திற்கு அனு மதி மறுப்பதாக தெரிவித்த காவல்துறையினர் போராட் டம் நடத்த விடாமல் குண்டுக் கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. ஆர். லெனின், மாவட்ட செயலா ளர் சி. முனீஸ்வரன், மாவட்ட பொருளாளர் கே ராஜா, நிர்வாகிகள் சவுந்தர பாண்டி யன், பிரேம் குமார், முகமது ரியாஸ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ரா. தமிழ் பெருமாள், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட செயலாளர் உதுமான் அலி,  இந்திய மாணவர்  சங்க மாவட்ட தலைவர் டி நாக ராஜ், மாவட்ட செயலாளர் வேல் பிரகாஷ் உள்ளிட் டோரை  கைது செய்து, மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.