districts

img

பன்முக வித்தகர் தோழர் வி.என்.ராகவன்

சென்னை, ஜூலை 23- தொழிற்சங்க தலைவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர்  என பன்முக வித்தகராக திகழ்ந்தவர் மறைந்த தோழர் வி.என். ஆர் என்று   சென்னை தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்ற நினை வேந்தல் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் குறிப்பிட்டனர். சனிக்கிழமை (ஜூலை 23)  நடை பெற்ற கூட்டத்திற்கு பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில்  உழைக்கும் வர்க்க அறக்கட்டளை தலைவர் ஜே.ரங்கநாதன் பேசுகை யில்,   தபால் தந்தி ஊழியர் சங்கம் ஆல மரம் போல் இன்று வளர்ந்துள்ளதற்கு மறைந்த தோழர்கள் சி.எஸ்.பஞ்சாபகேசன், வி.என்.ராகவன் ஆகியோரின் மகத்தான பணிதான் காரணம் என்றார். உழைக்கும் வர்க்கம் பத்திரிக்கையில் வரக்கூடிய அனைத்துகட்டுரைகளையும் படித்து விமர்சனம் செய்வார். அந்த விமர்ச னங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்கும். 1960,1968,1984 ஆகிய ஆண்டு களில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களில் வரலாற்று நாயகர்களாக விளங்கியவர்கள் சி.எஸ்.பி,  வி.என்.ஆர் என்ற மூன்றெழுத்து ரெட்டையர்கள் தான் என்று அவர் கூறினார்.

1960 நடைபெற்ற மத்திய அரசு ஊழி யர் வேலைநிறுத்தம்போல் இன்று வரைநடை பெறவில்லை. கடுமையான அடக்குமுறை ஏவப்பட்டிருந்த காலம். வேலூரில் அன்று தோழர் சி.எஸ்.பியும், வி.என்.ஆர்-ரும் மற்ற தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்த மலையில் தலைமறைவாக இருந்து அங்கேயே சமைத்து சாப்பிட்டு அந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி னர். இதற்காக பல பழிவாங்கலையும் அவர்கள் எதிர்கொண்டனர் என்று  அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் அமைப்பு பொதுச்செயலாளர் கே. ராகவேந்திரன் நினைவுகூர்ந்தார்.  சி.எஸ்.பி புதல்வர் சி.பி.ரவிசங்கர் பேசுகையில், தலைமறைவு காலத்தில் தவறான தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஆனால் போராட்டத்தை வெற்றிகரமாக்க சரியான தகவல்களை தலைவர்கள்-ஊழியர்கள் இடையே கொண்டு செல்லும் கூரியர்(தகவல்தொடர்பாளர்) பணியை மிக கச்சிதமாக செய்தவர் தோழர் ராகவன் என்றார். கட்சியிலும் தொழிற்சங்கத்திலும் சரி என்பதை ஏற்றுக்கொள்வதும் தவறு என்பதை நிராகரிப்பதிலேயேயும் உறுதியாக இருந்தார். இயக்கவியல் கோட்பாட்டை தனது குடும்பத்தினருடன் உரையாடலாக கொண்டு சென்றவர் வி.என்.ஆர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 சிவகுருநாதன் ( மாநிலத்தலைவர்- அஞ்சல் காசுவல் ஊழியர் சம்மேளனம்) பேசுகையில், தொழிற்சங்க தலைவர்களுக்கு இன்று ஏராளமான சலுகைகள் உள்ளன. ஆனால் எந்தசலுகையும் இல்லாத காலத்தில் அரசின் அடக்குமுறையை எதிர்த்து வேலூரில் செயல்பட்டவர் வி.என்.ஆர் என்றார்.  அவர் எழுதிய நூல்களை அதிகாரிகள் படித்து பாராட்டுவார்கள். தோழர்களின் குடும்ப உறவுகளை பேணி பாதுகாப்பதில் அக்கறையுடன்  இருந்தவர் அவர் என்றும் கூறினார். மக்கள் ஒற்றுமை மேடை  ஒருங்கி ணைப்பாளர் க.உதயகுமார் பேசுகையில், தீக்கதிர் சென்னைப்பதிப்பை நிலை நாட்டு வதிலும் ஆசிரியர் குழுவை பலப்படுத்து வதிலும்  வி.என்.ஆர் பங்கு மகத்தானது. இளம் வயது ஆசிரியர் குழு தோழர்களை வளர்த்தெடுத்தவர். அவரும் தோழர் ஏ.கே. வீரராகவனும் மற்ற  தோழர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டனர்.

எந்தவித வயது வித்தியாசம் இல்லாமல் செயல்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு பேசுகையில், “வெளியில் வீராவேசமாக பேசுவது, வீட்டில் வந்தவுடன் தான் தானாக இருப்பது’’ என்று பலர் உள்ள காலத்தில்  அப்படி இல்லாமல்  தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டவர் விஎன்ஆர். தன்னுடைய கருத்தில் தெளிவாகவும் ஆழமான புரித லோடும் இருந்தவர். கம்யூனிச  தத்துவத்தை போல் உலகில் வேறு எதுவும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். தீக்கதிரில் பல இளம் தோழர்கள் தியாக உணர்வுடன் பணியாற்றுவதற்கும் அவர்களை உதவி ஆசிரியர்களாக வடிவமைத்து உருவாக்குவதிலும் தோழர்கள் வி.என். ஆர், ஏ.கே.வீரராகவன் ஆகியோரது அர்ப்பணிப்பு மிக்க பணிதான் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தோழர் வி.என்.ஆர் குறித்த தகவல்கள் எங்களைபோன்ற தொழிற்சங்க தலை வர்களுக்கு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்த வழிகாட்டும் என்று ஆர்.பி.சுரேஷ் ( கன்வீனர்- தமிழ்மாநில என்.எஃப்.பி.இ) கூறினார். உஷா (பொதுமேலாளர் - பொறுப்பு சென்னைப்பதிப்பு), தலைமை நிருபர் ஸ்ரீராமுலு, உதவி ஆசிரியர் ம.மீ. ஜாபர் உள்ளிட்டோர் பேசினர்.  இந்த கூட்டத்தில் வி.என்.ஆர் குடும்பத்தினர் தீக்கதிர் ஊழியர்கள்,  தபால் தந்தி துறை யில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வி.என்.ஆர் உருவப்படத்திற்கு அனைவரும் மலரஞ்சலி செலுத்தினர்.