districts

img

ஏப்.11 கோட்டை முற்றுகை போராட்டத்தில் பல லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

மதுரை,ஏப்.4- சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை, முடக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு உடனே வழங்க வேண்டும். சத்து ணவு அங்கன்வாடி , வரு வாய் கிராம உதவியாளர் கள் எம்.ஆர்.பி செவிலிய ர்கள் , ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் , சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் . சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத் தை பணிக்காலமாக வரன் முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றக்கோரி  அரசு ஊழியர்கள் ஏப்ரல் 11 அன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்தை நடத்துகின்றனர். இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு  கூட்டம் ஏப்ரல் 4 செவ்வாயன்று மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. மாநில  அமைப்பாளர்-அரசு ஊழியர் சங்க  மாநி லத் தலைவர் மு. அன்பரசு தலைமை வகித்தார்.  இதில் கோட்டை முற்றுகை போரா ட்டத்தில் தமிழகம் முழுவ துமிருந்து பல லட்சம் அரசு ஊழியர்களை பங்கேற்க வைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செய லாளர் ஆ. செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.