districts

img

உலக மகளிர் தின கொண்டாட்டம் : குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பங்கேற்பு

நாகர்கோவில், மார்ச் 8- உலக மகளிர் தினத்தையொட்டி, கன்னி யாகுமரி மாவட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் விழா நடத்தப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் அ. சிவப்பிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சி யர் பு.அலர்மேல்மங்கை முன்னிலையில் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளை யாட்டு மைதானத்தில் செவ்வாயன்று (மார்ச் 8) மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகளிருக்கான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியும், கேக் வெட்டியும் தனது மகிழ்ச்சியை தெரி வித்தார். அப்போது பேசிய அவர், கோவிட் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகளும் நடை பெறவில்லை. தற்போது கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், முதல் பொது நிகழ்வாக மகளிர் தினவிழா நடைபெறு கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற நாளி லிருந்து வருவாய்த்துறையின் கீழ் இயங்கி வரும் வட்டாட்சியர்கள்,  ஊரக வளர்ச்சி முகமையின் கீழுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஏனைய துறைகளில் ஆண்களை விட பெண் அலுவலர்கள் அதிகமாக பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நடந்து முடிந்த கன்னியாகுமரி நாடளுமன்றம் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலின் போது இரவு என்றும் பாராமல் பெண் அலு வலர்கள் துணிச்சலாக தங்களுடைய பணி யினை செய்தனர்.

மேலும், தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மகளிர் தலை வராகவும், துணைத்தலைவராகவும், உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார்கள். கேரள மாநிலத்தை பொறுத்தவரை 1000 ஆண்களுக்கு 1012 பெண்கள் பிறப்பு விகிதம்  இருப்பதாக புள்ளி விவரம் தெரி விக்கிறது. நமது கன்னியாகுமரி மாவட்டத் தை பொறுத்தவரை 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் பிறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இருந்தபோதிலும் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஆண்களை விட பெண் அலுவலர்கள் அதிகமாக பணி புரிகிறார்கள் என மகிழ்ச்சி தெரிவித்த ஆட்சி யர், அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை கூறினார். முன்னதாக, நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் நடத்திய பறையாட்ட நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, திட்ட இயக்குநர்கள் ச.சா.தனபதி (ஊரக வளர்ச்சி முகமை), மைக்கேல் அந்தோனி பெர்னான்டோ (மகளிர் திட்டம்), நாகர்கோ வில் வருவாய் கோட்டாட்சியர் க.சேது ராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மா.வீராசாமி (பொது), எம்.ஆர்.வாணி (வேளாண்மை), துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) ஷீலா ஜாண், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நாகராஜன், உசூர் மேலாளர் .கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.