நரிக்குடி, ஆக.18- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பேருந்து நிலை யத்தில் கேட்பாரற்று கிடந்த தங்க நகையை எடுத்த தொடக்கப் பள்ளி மாணவிகள் சிலர் அதை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களை வெகு வாகப் பாராட்டிய காவலர்கள், நகையை தவறவிட்ட ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரி யராக பணிபுரிந்து வருபவர் சசிகலா. இவர், வழக்கம் போல நரிக்குடி பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தில் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளது. எனவே, அவர் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நரிக்குடி தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகளான சரவண சாஸ்தா என்பவரது மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் என்பவரது மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் என்பவரது மகள் தேவிகா ஆகியோர் நரிக்குடி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு தங்கச் சங்கிலி கிடந்ததை எடுத்துள் ளனர். பின்பு, அதனை பத்திரமாக பள்ளித் தலைமை யாசிரியரிடம் வழங்கியுள்ளனர். இதனையடுத்து, நரிக்குடி காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்துள்ளனர். அதன்பின்பு, போலீசார் நகையை இழந்த தமிழ் ஆசிரியை சசிகலாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் காணாமல் போன நகையின் அடையாளங்களை தெரி வித்துள்ளார். அது அவருடைய நகை என உறுதியானது. இதையடுத்து, நரிக்குடி போலீசார் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சோணைமுத்து மற்றும் மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர் சசிகலா விடம் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனர். இதையடுத்து, அனைவரும், மாணவிகளை வெகுவாக பாராட்டினர். போலீஸ் எஸ்.பி.பாராட்டு நகையை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் வர வழைத்து, பாராட்டுச்சான்றிதழ் வழங்கி, பாராட்டினார்.