கோட்டயம், பிப். 8- பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ் நாகப் பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்தார். மயக்கமுற்ற நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பல்வேறு துறைகளின் தலை வர்கள் அடங்கிய மருத்துவக் குழுவால் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியுடன் தனது 40 ஆண்டு கால உறவில், ஒரு உயி ருக்காக இப்படி தங்களை மறந்து ஒருங்கி ணைந்து மருத்துவர்கள் செய்த பணியை நான் பார்த்ததில்லை என்று அமைச்சர் வி.என்.வாசவன் கூறினார். பாம்பு விஷத்தைப் போக்க வாவா சுரேஷின் சிறப்புத் திறனும் பலன் அளித்ததாக மருத்துவர்கள் கருதுகின்றனர். அப்படித் தான் வாவா சுரேஷ் மிக விரைவாக புத்துயிர் பெற்றார். ஜனவரி 31ஆம் தேதி, தொடையில் நாகப்பாம்பு கடித்ததில் சுரேஷ் ஆபத் தான நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார். அப்போதிருந்து, அனைத்து துறை தலைவர்களும் நேரடியாக சிகிச்சையை வழிநடத்தினர். தினசரி அடிப்படையில் நிலைமையை நேரடியாக மதிப்பீடு செய்து கொண்டிருந்தனர். அவ்வப்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மீண்டும் மோசமடைந்ததால் மருத்துவர் கள் குழப்பமடைந்தனர். வழக்கத்தை விட இரண்டு மடங்கு ஆன்டிவெனின் கொடுக்கப்பட்டது. மருந்துகளுக்கு மிக விரைவாக சுரேஷ் எதிர்வினையாற்றினார். உயிரைக் காப்பாற்றினாலும், விஷம் உடலின் சில உறுப்புகளை நிரந்தரமாக பாதிக்கலாம். கால் மற்றும் தசை பாதிப்பு ஏற்படலாம். ஆனால் ஐசியூவில் இருந்து மாற்றப்பட்டபோது, வாவா சுரேஷுக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். சுரேஷின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மருத்துவர்கள் உட்பட ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரு வார காலம் உழைத்தனர். அதன் பயனாக வாவா சுரேஷ் மருத்துவமனையிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளார். இது கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருததுவமனைக்கு நன்மதிப்பை பெற்றுத்தந்துள்ளது.