districts

img

ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாவூற்று வேலப்பர் கோவிலில் குடமுழுக்கு

தேனி, ஏப்.10- ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து கொண்டனர் . ஆண்டிப்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோவில் அமைந்துள்ளது. ஆயி ரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலைப்பகு தியில் வசித்த பழங்குடியின மக்கள் உண வுக்காக கிழங்கை தோண்டிய போது, சுயம்புவாக உருவான வேலப்பர் சாமியை  கடவுளாக வணங்கி கோவில் கட்டி வழிபட்டு  வருகின்றனர். இந்தக் கோவிலில் தற்போது  வரை பழங்குடியின மக்களே பூசாரியாக உள்ளனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த  கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. மாவூற்று வேலப்பர் கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த வேண்டுமென  மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, 22 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபி ஷேகத்தைக் காண ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.