விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் நடைபெற்ற பாலர் பூங்கா சிறப்புக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உரையாற்றினார். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் எம்.சுந்தரபாண்டியன், ஆர்.முத்துவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகி அமலராஜன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.