மதுரை, ஆக.18- ‘‘போராடிப்பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்’’ என்ற முழக்கத்து டன் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசா யத் தொழிலாளர் சங்கம் சார்பில் மதுரை புறநகர் சமயநல்லூரில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு எம்.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் அ.வேல்பாண்டி துவக்கி வைத்து பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், மாவட்ட துணைத் தலைவர் வி.பிச்சைராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ்வரன், மாவட்டப் பொருளாளர் ஏ.ஆறுமுகம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.