districts

கர்நாடக முதலமைச்சரின் அத்துமீறலுக்கு ஆர். முத்தரசன் கண்டனம்

சென்னை,ஜன.24- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடக அரசின் அதிகார அத்து மீறலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் புளோரைடு அளவுக்கு மீறிய அடர்த்தியாக இருப்பது கண்டறியப்பட்டது. பல் உதிர்தல், எலும்பு கள் பலவீனமாதல், சிறுநீரகப் பாதிப்புகள் என பல பாதிப்புகளுக்கு ஆளாகி வந்த மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்க சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மக்கள் நல்வாழ்வையும் சுகாதா ரத்திலும் அக்கறை காட்டிய, இன்றைய முதலமைச்சர், துணை முதல்வர் உள்ளாட்சி துறை நிர்வாகத்தில் இருந்த போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்  2008 பிப்ரவரி 26 ஆம் தேதி, அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ஜப்பான் நாட்டு கூட்டுறவு வங்கி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்  என்பதும் முற்றிலும் தமிழ்நாடு எல்லை க்குள் அமைத்திருப்பது பில்லிகுண்டுலுக்கு கீழ் பகுதியில் தமிழ்நாட்டிற்கு சட்டப்பூர்வ உரிமையுள்ள தண்ணீரை ஆதாரமாகக் கொண்டது. இதில் கர்நாடக அரசு கருத்துச்  சொல்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை.  மேகதாது அணை கட்டும் பிரச்ச னையை திசைதிருப்ப கர்நாடக முதல மைச்சர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்து மீறலாகும். தமிழ்நாட்டு மக்களின் ஆத்தி ரத்தை தூண்டும் மலிவான செயலாகும். கர்நாடக முதலமைச்சரின் வரம்பு மீறிய செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பிட்ட கால வரம்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.