districts

img

கண்மாய் நிரம்பி நீர் வெளியேற வழியின்றி வயல்களுக்குள் புகுந்தது-வாழைகள் நாசம்

சின்னாளப்பட்டி, அக்.20- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கல்  லடிப்பட்டியில் சுமார் 30  ஏக்கர் பரப்பளவில் மீனாட்சி புரம் கண்மாய் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை யால் சிறுமலை காட்டாறு களிலிருந்து வரும் மழைநீர் மாவூர் அணையில் நிரம்பி மறுகால் சென்று பள்ளபட்டி யில் பெரிய கண்மாயான அக ரம்குளம் கண்மாயில் நிரம்பி, மூன்றாவது கண்மாயாக மீனாட்சிபுரம் கண்மாய்க்கு  வந்து நிரம்பியுள்ளது. 20 ஆண்டு  களாக வறண்டு கிடந்த  மீனாட்சிபுரம் கண்மாய் தற் போது நீர் நிரம்பியுள்ளது. கண்மாய் தண்ணீர் வெளியேறுவதற்கு வழி யின்றி அருகேயுள்ள வாழை, தென்னை உள்ளிட்ட வயல்  பகுதிகளுக்குள் புகுந்தது. சுமார் ஐந்து அடி முதல்  10-அடி வரை நீர் தேங்கி நிற்ப தால் வயலில் போடப்பட்ட சொட்டுநீர்பாசன குழாய் கள், போர்வெல்கள் மற்றும் சிறுதானிய ஊடு பயிர்கள், மாட்டுக்கொட்டகை உட்பட தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் கடந்த ஒரு  வாரமாக வயலில் நிற்பதா லும் தண்ணீர் வடிவதற்கு மேலும் இரண்டு மாதகாலம் ஆகும் என்பதால் விவசாயி கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே தமிழக அரசு  உரிய ஆய்வு செய்து நிவார ணம் வழங்க வேண்டும் என்று  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.