மதுரை, ஆக.29- மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நாடாளு மன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சா யத்து ராஜ் நிலைக்குழு தலைவரும், தூத் துக்குடி மக்களவை உறுப்பினருமான கனி மொழி கருணாநிதி தலைமையிலான நிலைக்குழு உறுப்பினர்கள் செவ்வாயன்று ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து கனிமொழி கருணா நிதி கூறியதாவது:- நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநி லம் விசாகப்பட்டிணத்தில் தொடங்கி இன் றைய தினம் மதுரை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நேரடி யாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விளாச் சேரி கிராமத்தில் களிமண் பொம்மை தயா ரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலா ளர்களுடன் கலந்துரையாடி, களிமண் பொம்மை தயாரிக்கும் முறை, அவற்றைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்டறிந்தோம். மதுரை யா.ஒத்தக்கடையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாயத் தொழில் முனைவோர் பாது காப்பு மையத்தைப் பார்வையிட்டோம். இந்த ஆய்வின் போது களிமண் பொம்மை தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கை களை முன் வைத்தார்கள். இக்கோரிக்கை கள் தொடர்பாக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதனை நிறை வேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.