மதுரை, ஜூலை 15- முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தின விழா பல்வேறு மாவட் டங்களில் கொண்டாடப்பட்டன. மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டு செல்லூர் மனோகரா நடுநிலைப் பள்ளியில் 500 மாணவ, மாணவி களுக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது இதில் மதுரை மாநகர துணை மேயர் டி. நாகராஜன், 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மனோகரா நடுநிலைப்பள்ளி தாளா ளர் பால் ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. ராதா மற்றும் குறிஞ்சி மலர் அரிமா சங்கம் நிர்வாகிகள், இணைந்த கைகள் அமைப்பினர் கலந்து கொண்டனர். அல்-அமீன் பள்ளி மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் தலைமை யாசிரியர் ஷேக் நபி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை நியூ லக்கி டிராவல்ஸ் உரிமையாளர் முக மது அலி ஜின்னா பேசினார். கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கடந்த கல்வியாண்டில் (2022-2023) அரசுப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழக அரசால் சென்ற ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புத்திறன் பாடத்தில் 11 ஆம் வகுப்பு அரசுப்பொதுத்தேர் வில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர் மாதவனுக்கு சிறப்புப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விருதுநகர்
விருதுநகரில் காமராஜர் உருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்த னர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் தொடக்கப்பள்ளி சார்பில் காமராஜர் போல் வேடம் அணிந்த 121 மாணவர்கள்கலந்து கொண்ட பேரணியை வட்டார கல்வி அலுவலர்கள் செல்வ லட்சுமி, மலர் கொடி தலைமை தாங்கி துவக்கி வைத்தனர். பள்ளி செயலாளர் பால சுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸி சாந்தாராணி, குருசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் திமுக சார்பில் நகரச் செயலாளர் வழக்க றிஞர் அய்யாவு பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் கு.ஆறுமுகம், நகர் மன்ற துணைத் தலைவர் செல்வ மணி மற்றும் திமுகவினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலை வர் முருகதாசன், பட்டயத் தலை வர் வேலாயுதம், பொருளாளர் வினோத் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் முருகேசன் வரவேற்று பேசினார். முதல்வர் ராணிமுருகேசன் தலைமை உரையாற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.