திருவில்லிபுத்தூா்,ஆக.18- கலசலிங்கம் பார்மசி கல்லூரி 35 வது ஆண்டுவிழா கல்லூரி செயலாளர் முனைவா் எஸ்.சசி ஆனந்த் தலைமை யில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெங்கடேஷன் வரவேற்றார். தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார சேவை கள் (இஎஸ்ஐ) இயக்குனர் டாக்டர் ஜெ. ராஜா மூர்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை டேப்ளட்ஸ் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் டி சதீஸ், மதுரை மருத்துவ கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் என். முருகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்கலைக்கழகத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் விருந்தினர்கள் வழங்கிப் பாராட்டினர். 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில் கலசலிங்கம் பார்மசி கல்லூரிக்கும் டேப்ளட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.