மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.32 காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி ஆகியோர் சனிக்கிழமையன்று துவக்கி வைத்தனர். முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, சுகாதாரக் குழுத் தலைவர் ஜெயராஜ், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.