இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா காடமங்கலம் கிராமப் பகுதியில் என்எல்சி நிர்வாகத்தால் துவங்கி செயல்பட்டு வருகிற சோலார் மின் நிலையங்களில் பணிபுரியும் பாதுகாவலர்கள் 40 பேர் சிஐடியு முறை சாரா தொழிலாளர் சங்கத்தில் இணைந்தனர். என்எல்சி நிறுவனம் முன்பாக தொழிற்சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது முன்னதாக சிஐடியு கொடியை மாவட்ட பொருளாளர் ஆர். முத்து விஜயன் ஏற்றி வைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் வி முருகன் வாழ்த்திப் பேசினார்.