districts

img

வலதுசாரிகளிடமிருந்து தேசம் காக்கும் போராட்டத்தில் ஓய்வூதியர் பங்கு முக்கியமானது

மதுரை, மார்ச் 8 - வலதுசாரி பிற்போக்கு வாத எதேச்சதிகார ஆட்சியாளர் களிடமிருந்து இந்திய தேசத்தை பாது காக்கும் போராட்டத்தில் ஓய்வூதி யர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் தலைவர் களில் ஒருவரும் திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி கூறினார்.

தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மதுரை மாவட்டக்கிளை சார்பில் செவ்வா யன்று  சிறப்புக் கருத்தரங்கம் நடை பெற்றது. “ நாடும் நாமும்” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்று உரையாற்றினார்.

தமிழக அரசின் பல்வேறு துறை களில் ஊழியர்களாக, அதிகாரிகளாக பணியாற்றிய தாங்கள் இன்றைக்கு அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு அனை த்துறை ஓய்வூதியர் சங்கம் என்ற குடை யின் கீழ் சங்கமித்துள்ளீர்கள். அரசுப் பணியில் இருந்தபோது குடும்பம் குறித்தோ, உறவுகள் குறித்தோ, இந்தச் சமூகம் குறித்தோ பேசுவதற்கு போது மான வாய்ப்புகள் கிடைத்திருக்காது. அந்தளவிற்கு பணிச்சுமையோடு இருந்திருப்பீர்கள். ஆனால், ஓய்வு பெற்ற பிறகு  ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்பவர்கள் “சுகர் எப்படி யிருக்கிறது, உடற்பயிற்சி செய்கிறீர் களா” எனக் கேட்பது வழக்கமாகி விட்டது. அத்தோடு குடும்பம், உறவு கள், இந்தச் சமூகம் குறித்து விவாதிக்க வும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தச் சமூகம் என்பது குடும்பம், உறவு, நாடு, நாட்டு மக்களை உள்ளடக்கி யது தான். இவை குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறவேண்டும்.

இடதுசாரிகளும் வலதுசாரிகளும்
உலக அரசியலில் இரண்டு சமூகங் கள் மட்டுமே உள்ளன. ஒன்று இடது சாரிகள்; மற்றொன்று வலதுசாரிகள். இடதுசாரிகள் மக்கள் நலனுக்காக, நாட்டிற்காக போராடுபவர்கள். ஆனால், வலதுசாரிகள் பொத்தாம் பொதுவாக “தலைவிதி” என்பார்கள். ஆன்மீகத்தை மதத்தோடு கலந்து அதை அரசியலாக்கி மக்களைப் பிளவு படுத்த முயற்சிப்பார்கள். அதன் மூலம் அரசியலதிகாரத்திற்கும் வரு வார்கள்.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கொடூர மான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா முன் நிற்கிறது. இந்தி யாவும் துணை நிற்கிறது. ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்கிறது. உக்ரைனே போரை நிறுத்திக் கொள்கிறேன் என்றாலும் அமெரிக்கா அதன் சட்டையைப்பிடித்துக் கொண்டு “தம்பி போரைத் தொடர்” என்கிறது. ஏனென்றால் அமெரிக்காவிற்கு தேவை ஆயுத விற்பனை. இதன் மூலம் உலகளவிலான சுரண்டல் நடை பெறுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மோடி தலைமையிலான அரசை அதானி, அம்பானி போன்றவர்கள் தான்  வழி நடத்துகின்றனர். அவர்களுக் காகத் தான் அரசின் கொள்கைகள் உள்ளன. ஒன்றிய அரசு ஜிஎஸ்டி மூலம்  ரூ.20 லட்சம் கோடியை வசூலித்துள் ளது.  ஏழை-எளிய-நடுத்தர மக்களி டம் அடித்த கொள்ளை மூலம் தான்  இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளது.

பிணைக் கைதிகளாக மாநிலங்கள்
தமிழகத்தில் இரண்டு லட்சம் காலிப் பணியிடங்கள் ஐந்து லட்சம் காலிப் பணியிடங்களாக அதிகரித்துள்ளன. காலிப் பணியிடங்களை நிரப்ப முடி யாததற்குக் காரணம் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதிப் பகிர்வை முறையாகக் கொடுக்காதது மிக முக்கியக் காரணம். சென்னை, தூத்துக்குடி, திரு நெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது பிரதமர் வந்து பார்க்காதது மட்டுமல்ல தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தரவில்லை.  

ஒன்றியத்திலும் மாநிலத்திலும் எதிரும் புதிருமான கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் கூட மாநில அரசுகள்  ரூ.2,000 கோடி கேட்டால் ரூ.400 அல்லது ரூ.500 கோடி யாவது தருவது வழக்கம். ஆனால், மோடி அரசு எதையும் கொடுக்க மறுக் கிறது. இது பாஜகவின் அரசியல் மட்டு மல்ல; அரசியல் சட்டத்தை, கூட்டாட்சி  தத்துவத்தை, ஜனநாயக விழுமிய ங்களை, நிதிப்பகிர்வு விதியை என அனைத்தையும் பாஜக அரசு காலில் போட்டு மிதிக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும்  மாநிலங்களை பிணைக் கைதி களாக மாற்ற முயற்சிக்கிறது. இந்த பிரதான விஷயங்களை ஓய்வூதியர்கள் தங்களது குடும்பத்தின ரிடம், உறவினர்களிடம் நண்பர்களி டம் ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கை களை எடுத்துக்கூறி எதிர் கால இந்தியா எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு திட்டமிட வேண்டும்.

இவ்வாறு பாலபாரதி பேசினார்.

சங்கத்தின் மாநிலப்பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் பேசுகையில், “ஓய்வூதியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற வேண்டி யிருக்கிறது. அதற்காக நாம் குரல் கொடுக்கிறோம். இயக்கங்கள் நடத்து கிறோம். தொடர்ந்து போராடுவோம். அதைவிட முக்கியம் இந்த நாடு. எதிர்வரும் மக்களவைத் தேர்தல். நாடு நன்றாக இருந்தால் தான் நாம் நலமாக இருக்க முடியும். தமிழகத்தில் உள்ள நிலைமைகளை நாம் சமாளிக்க முடியும்; பேச முடியும்.

ஆனால், இங்கு “வேறொரு வரை ஆக்கிரமிக்க அனு மதித்தால்” ஆக்கிரமிப்பாளர்களை விரட்டுவதற்கு மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்துவிடும்” என்றார். கருத்தரங்கில் அமைப்பின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், மதுரை மாவட்டத் தலைவர் சு.கிருஷ்ணன், செயலாளர் அ.பால்முருகன், மாவட்டப் பொருளாளர் என்.ஜெயராமன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.