தேனி, டிச.9- பாரம்பரிய, மரபு சார்ந்த நெச வுத்தொழிலை பாதுகாக்க நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கூறி னார். விசைத்தறி கைத்தறியால் உற்பத்தியாகும் துணிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆண்டிபட்டியில் தர்ணா போராட்டம் நடைபெற் றது. இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.பால பாரதி பேசியதாவது: இந்தியாவில் பாரம்பரிய, மரபு சார்ந்த தொழில் நெசவுத் தொழில். தமிழகத்தில் இரண்டா வது பெரிய தொழில் ஆகும். தற் போது நூல் விலை உயர்வால் தமிழகத்தில் தறி சத்தம் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் திருப் பூர், கோவை,ஈரோடு, கரூர், நெல்லை ,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித்தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளது. நூல் விலை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு ஒன்றிய பாஜக அரசே காரணம். இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில முதல்வர் கவ னத்திற்கு கொண்டு சென்றுள் ளது. நூல் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம். கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு ஆதர வாக, பஞ்சு,நூலின் மூலப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்று மதி செய்கிறது. அவைகளுக்கு மானியம் வேறு கொடுக்கிறார் கள். மரபு சார்ந்த நெசவுத் தொழிலை பாதுகாக்க செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி, நூல் விலை உயர்வுக்கு காரண மாக இருப்பவர் மீது நடவ டிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தர்ணா போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் மா. தங்க ராசு தலைமை வகித்தார். சிஐ டியு கைத்தறி சங்க மாவட்ட செய லாளர் எஸ்.தங்கவேல், கவிதா டெக்ஸ் உரிமையாளர் எஸ்.பழ னிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தயாளன், ஒன்றிய செய லாளர் எஸ்.மீனாட்சிசுந்தரம் ஆகி யோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ராமன் பேசினார்.மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ராமர், சு.வெண்மணி உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.