சென்னை, டிச.18 சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரி யர் அன்பழகனின் மார்பளவு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று (டிச.19) திறந்து வைக்கிறார். தி.மு.க அரசின் அமைச்சரவையில், பல்வேறு கால கட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவரும், தி.மு.க.வின் நீண்டகால பொதுச் செயலாளராக 1977 முதல் 2020 வரை இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். அவர் வயது மூப்பு காரணமாக கடந்த 07.03.2020 அன்று உடல் நலக்குறை வால் காலமானார். இந்நிலையில், கடந்த சட்டபேரவை கூட்டத்தொடரில்பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாக ராஜன்,சென்னையில் நிதித்துறை கட்டிட வளாகத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் க.அன்பழகனின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக, பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு “பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை” எனப் பெயர்சூட்டி, நாட்டுடைமையாக்கப்பட்ட அவரின் நூல்க ளுக்கு அரசின் நூலுரிமைத் தொகையையும் அவரது குடும் பத்தினருக்கு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.