districts

அதிமுக ‘அண்ணாமலை திமுக’ ஆகிவிடுமோ?

அருப்புக்கோட்டை, ஜூலை 4-  அருப்புக்கோட்டையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நகரச் செயலாளர் எஸ்.காத்தமுத்து தலைமை தாங்கி னார். கட்சி நிதியாக நகர் குழு மற்றும் ஒன்றியகுழு சார்பில் தலா ரூ. 2 லட்  சம் என மொத்தம் 4 லட்ச ரூபாய்  வழங்கப்பட்டது. நிதியை கட்சியின்  மாநில செயலாளர் கே பாலகிருஷ் ணன் பெற்றுக் கொண்டு சிறப்புரை  ஆற்றினார்.

கோடீஸ்வரர்களுக்கு  10.75 கோடி தள்ளுபடி

அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசானது கிராமப் புற ஏழை மக்கள் பயன்பெற்று வரும் 100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சி செய்து வருகிறது.  பிரதமர் நரேந்திர மோடி கடந்த எட்டு  ஆண்டுகளில் ரூ.10.75 லட்சம் கோடி யை அம்பானி அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி  செய்துள்ளார். அதே நேரத்தில் சாதா ரண விவசாயிகள் வாங்கிய கடனை  ஒரு பைசா கூட தள்ளுபடி செய்ய வில்லை. மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன்களையும், சிறு வியா பாரிகள் வங்கியில் வாங்கிய கடன்  களையும் ரத்து செய்ய மறுக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வால் பாஜக ஆட்சியில் செய்த சாத னைகளை கூற முடியவில்லை. அடுத்து எங்களது இலக்கு, தமிழ கம், கேரளா, ஆந்திரா என்றுதான் கூறுகிறார்.

பாஜகவால் அனைவரும் பாதிப்பு

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் விலைவாசி உயர்வு, விவசாயம்  பாதிப்பு, சிறு குறு தொழில்கள் பாதிப்பு, அனைத்து பொருட்களுக் கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு என பல்  வேறு தாக்குதல்களை மக்கள் மீது ஏவியுள்ளனர். அதே நேரத்தில் பாஜகவினர் மதத்தின் பெயரால் நாட்டை கூறுபோடுகின்ற வேலை யை செய்கின்றனர். வடமாநிலங்க ளில் சிறுபான்மை மக்கள் வீட்டை  விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கேரளாவிலும் மதக் கலவரங்களை ஏற்படுத்த இவர்  கள் துடிக்கிறார்கள். இரு மாநிலங்க ளிலும் இவர்களின் மத வெறி நட வடிக்கைகளை தடுக்கின்ற பணி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும்.

அரசியல் வியாபாரம்

நியாயமாக தேர்தலை சந்தித்து வெற்றி பெறாமல் குதிரை பேரத்தில்  ஈடுபட்டு எம்எல்ஏக்களை அடி மாடு களை விலைக்கு வாங்குவது போல்  வாங்கி ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்துகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இவர்கள் செய்தது ஒரு அரசியல் வியாபாரம் ஆகும்.

மைக்கு ஜி.எஸ்.டியா?

சமீபத்தில் கூடிய ஜிஎஸ்டி கவுன்  சில் மைக்கு வரியை உயர்த்தியதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சுத்தொழில் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளது. ஏற்க னவே விருதுநகர் மாவட்டத்தின் பிர தான தொழிலாக விளங்கி வரும்  பட்டாசுக்கு ஜிஎஸ்டி வரி விதித்தனர் பாஜக ஆட்சியாளர்கள்.

பட்டாசு தொழில் பாதிப்பு

தற்போது பசுமை பட்டாசுக ளைத் தயாரிக்க வேண்டும் என நீதி மன்றம் மூலம் நிர்பந்தம் செய்கின்ற னர். கேட்டால் சுற்றுச்சூழல் மாசு படும் என கூறுகின்றனர். உண்மையி லேயே அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகளால்  தான் மாசு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதன்  மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காமல் எப்போதாவது வெடிக் கும் பட்டாசை வெடிக்க கூடாது என  நிர்பந்திக்கின்றனர். பட்டாசு தொழிலை கார்ப்பரேட்மயமாக்க இதுபோன்ற சதிச் செயல்களை செய்கின்றனர்.

விசைத்தறி தொழில் நசிவு

திருப்பூர், கோவை, ஈரோடு உள்  ளிட்ட மாவட்டங்களில் விசைத்தறி தொழில்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதற்கு காரணம் அம்பானி - அதானி போன்றவர்கள் பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய் கின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஆகியோர் வாய் திறக்க மறுக்கின்றனர்.

அண்ணாமலை திமுக

தமிழகத்தில் அதிமுக என்ன வாக போகிறது என தெரியவில்லை. ஒற்றை தலைமையா இரட்டைத்  தலைமையா என்ற பிரச்சனைக்குப் பின்னால் பாஜக உள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை ஆதரிக்கின்றனர். மதுரையில் மடாதிபதிகள் மாநாடு நடத்தினர். முஸ்லிம்களை தேச விரோதிகள் என தெரிவித்தனர். இக்கருத்தை அனைத்து கட்சிகளும் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அண்ணாமலை மடாதிபதிகளுக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். இதை எடுத்து அதேபோன்ற அறிக்  கையை ஓபிஎஸ் - இபிஎஸ் விடுகின்ற னர். இவர்கள் அண்ணா திமுக என்பதை மாற்றி ‘அண்ணாமலை திமுக’ எனக் கூட பெயரை மாற்றி விடுவார்கள் போல தெரிகிறது. கடுமையான கொரோனா இரண்டாவது அலை தாக்குதலின்  போது ஆட்சிக்கு வந்த திமுக மிகத் திறமையாக அதை கையாண்டது. மேலும் பேருந்துகளில் பெண்க ளுக்கு இலவசப் பயணம், 4000 கோடி ரூபாய் வங்கி கடன் தள்ளு படி என பல்வேறு நலத்திட்டங் களை திமுக அரசு செய்து வரு கிறது.இதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே  நேரத்தில் போக்குவரத்து தொழிலா ளர்கள் பிரச்சனை, அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் உரிமைகள் போன்ற விஷயங்களில் வாதாடி போராடி பெறவும் தயங்க மாட் டோம். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக் குமார், வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பூங்கோதை, பி.அன்புச்செல்வன், ஏ.அம்மாசி, எம்.ஜெயபாரத், ஒன்றிய செயலா ளர்கள் எம்.கணேசன், மார்கண்டே யன் மற்றும் தமிழ்செல்வராஜ் உட் பட பலர் பங்கேற்றனர்.