மதுரை, செப். 19- மதுரையை தலைமை யிடமாக கொண்டு செயல் பட்டு வந்த நியோமேக்ஸ் என்ற பிரபல நிதி நிறுவனம் மூலம் பல்வேறு பெயர்களில் 20-க்கும் மேற்பட்ட கிளை நிறு வனங்களை தமிழகம் முழு வதும் உருவாக்கி பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நெல்லை, பாளையங்கோட்டை, மதுரை, விருதுநகர், இராம நாதபுரம் உள்ளிட்ட கிளை களை நிர்வகித்து வந்த 17 நிர்வாகிகள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகிய 5 நபருக்கு ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை கவுதமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். ஒரு கோடி ரூபாய் நியோ மேக்ஸ் சில் முதலீடு செய் தேன். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏக்கர் கணக் கில் நிலம் வாங்கி வைத்து உள்ளோம். ஒன்றிய அரசின் பெரிய திட்டங்கள் வர உள் ளது. எனவே, இதில் இணைந்து அதிக லாபம் பெறலாம். என ஆசைவார்த்தை கூறினர். ஆனால் கூறியபடி பணமோ, நிலமோ ஒதுங்க வில்லை. இவர்கள் முத லீட்டாளர்களின் பணத்தை கல்லூரிகள், வெளிநாடு களில் முதலீடு செய்து உள்ள னர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. தற் போது மதுரை பொருளா தார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்டவர் களோடு, இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதி காரிகள் சிலர், உறுதுணை யாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது. மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய் வதில், கால தாமதமாகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர் களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந் தது. அப்போது, மனுதாரர் தரப்பு, ‘‘முக்கிய குற்றவாளி களை இதுவரை கைது செய்யவில்லை. கைது செய் யப்பட்டவர்களில் சிலர் ஜாமீ னில் வெளி வந்து உள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி தொடர்பானது. எனவே இந்த வழக்கை சிபிஐ விசா ரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்றனர். அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார், முக்கிய மான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திங்களன்று 2 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் மற்றவர்களையும் கைது செய்து விடுவோம். இது வரை 5000 சொத்து ஆவ ணங்கள் பறிமுதல் செய்யப் பட்டு உள்ளன. புதிய டிஎஸ்பி நியமிக்கப்பட்டு உள்ளார். உரிய முடிவு எட்டப்படும்’’ என்றார். இதை தொடர்ந்து நீதி பதி, குற்றம் சாட்டப்பட்ட வர்களை விரைவாக கைது செய்ய வேண்டும், தேவைப் பட்டால் இந்த வழக்கை விசா ரிக்கும் பொருளாதார குற் றப்பிரிவு, விசாரணை அதி காரிகள் தொலைபேசி தொடர்புகள் சோதனை செய்ய நேரிடும் என எச்ச ரிக்கை விடுத்தார். மேலும் வழக்கில் பிர தான குற்றவாளிகளை இது வரை ஏன் கைது செய்ய வில்லை என கேள்வி எழுப் பிய நீதிபதி, உரிய நடவடிக்கை எடுத்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் இல்லை யேல், சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும்? என கூறி வழக்கு விசாரணையை செப் டம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.