districts

img

சம வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான் பட்டியலின மக்கள் உயர் பதவிகளுக்கு வர முடியவில்லை

விருதுநகர், ஜூலை 29- விருதுநகர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் கலந்து கொண்ட ஊடகவிய லாளர் மு.குணசேகரன், சமூக நீதி யின் சரித்திரப் பயணம் என்ற தலைப்  பில் உரையாற்றினார். அவர் பேசிய தாவது: தற்போது ஏராளமானோர் முதல் தலைமுறை பட்டதாரிகளாகவே உள்ளனர். அதற்கு காரணம் இட  ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு இல்லை யெனில் இந்த நிலையை நாம் அடைந்  திருக்க முடியாது. அதேவேளை, நமது பெற்றோருக்கு இந்த வாய்ப்பு  தரப்படவில்லை. அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியெனில் யாருக்கு உயர் கல்வி பயில வாய்ப்பு தரப்பட்டது. உயர் சாதியினருக்கு மட்டுமே அந்த  வாய்ப்பு அப்போது கிடைத்தது. ஆனால், இப்போதும், 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்ற ஒரு ஏழை  மாணவனால் மருத்துவம் படிக்க முடி யவில்லை. அவன் கால்நடை மருத்  துவ படிப்பை வேறு வழியின்றி தேர்ந்தெடுத்துள்ளான். காரணம் அவரது தந்தை ஏழை.இதனால் நீட்  தேர்வுக்கு படிக்க, கோச்சிங் சென்ட ருக்கு சென்று பணம் செலவு செய்து  படிக்க முடியவில்லையென பத்திரி கையில் செய்தி வந்துள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப்  பள்ளி மாணவர்களுக்கு இல்லை யெனில் மருத்துவப் படிப்புக்கு ஏழை  மாணவர்கள் யாருமே வர முடி யாது. வசதி படைத்தவர்கள் ஒரு  முறை அல்ல பலமுறை நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்கின்றனர். ஆனால்,  ஏழை, கிராமப்புற மாணவர்கள் பண மில்லாத காரணத்தால் நீட் கோச்சிங் மையத்திற்கு செல்ல முடிவதில்லை.

தலைசிறந்த மருத்துவ மேதைகள், நீட் தேர்வால் மருத்துவத்துறையின் தரம் உயராது எனக் கூறுகின்றனர்.  அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்  டுமென்ற கோரிக்கையை நான் ஏற்கி றேன். சென்னை போன்ற பெரு நக ரங்களில் வசதி படைத்தவர்கள் படிக்  கும் ஒரு சில அரசு உதவி பெறும்  பள்ளிகளைத் தவிர மலைப் பகு தியை ஒட்டியுள்ள, பின் தங்கிய பகுதி களில் உள்ள அரசு உதவி பெறும்  பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம். கடந்த 2018 முதல் உயர் நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங் களில் நியமிக்கப்பட்டவர்களில் 79 சத வீதம் பேர் உயர் சாதியினர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. வாய்ப்பு  மறுக்கப்பட்டதால்தான் பலர் உயர் பதவிகளுக்கு வர முடியாத நிலை உள்ளது. எனவே, இட ஒதுக்கீடு என்பது நமது உரிமையாகும். தலைமை நீதிபதிகளாக பட்டி யலின, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மிகக் குறைவாகவே இருந்துள்ளனர். இந்த முறையை  மாற்ற வேண்டுமென ஏராளமா னோர் கோரிக்கை விடுத்து வருகின்ற னர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன் தலைமையேற்றார். மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்கு மணி நன்றி கூறினார். இதில் பேச்சுப்  போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.