தேனி, மே13- தேனி மாவட்டம் போடிநாயக்கனூ ரில் மின் வாரியத்திற்குச் சொந்தமான மின் கம்பங்களை ஆக்கிரமித்து அம்பானியின் ஜியோ நிறுவனம் கேபிள் டிவி வயர் மற்றும் பாக்ஸ் களை பொருத்தி அத்துமீறி உள்ளது. மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோடிக்கணக்கான பொருட்செலவில் மின் கம்பங்கள் நட்டு மின்பாதைகள் அமைத்து வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலை களுக்கு மின் இணைப்பு வழங்கி வரு கிறது. ஜியோ நிறுவனம் அத்துமீறல் இந்நிலையில் கடந்த சில நாட்க ளுக்கு முன்பு போடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற் குச் சொந்தமான மின் கம்பங்களில் அம்பானியின் ஜியோ நிறுவனம், கேபிள் டிவி இணைப்புக் கொடுப்ப தற்காக கேபிள் வயர்களையும், பாக்ஸ் களையும் பொருத்தும் பணியில் ஈடு பட்டனர். பட்டப் பகலில் மின்கம் பங்களுக்கு அருகே லாரியை நிறுத்தி, அதன் மேல் ஏணியை நிறுத்தி மின் கம்பங்களில் கேபிள்களைப் பொருத்தி னர். அதுவும் போடியில் உள்ள மதுரை மின் வாரிய முதன்மைப் பொறியாளர் உமாதேவியின் வீட்டுக்கு அருகேயும் பொருத்தினர். தேனி போன்ற நகரங்களில் தனி யாக இரும்புக் கம்பம் நட்டு கேபிள் மற்றும் பாக்ஸ்களை பொருத்தியுள்ள னர். போடியில் மின் வாரியத்திற்குச் சொந்தமான மின் கம்பங்களில் ஆபத்துகளை பொருட்படுத்தாமல், தொழிலாளர்களை மின் கம்பங்களில் ஏற்றி ஜியோ நிறுவனம் கேபிள்களை பொருந்தியுள்ளது. பழுது ஏற்படும் போது, மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி பணி செய்யும் போது கேபிள் வயர் பெரும் இடையூறாக இருக்கும். இதனால் தொழிலாளர் களுக்கு சில நேரம் ஆபத்து கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எவ்வித முதலீடும் செய்யாமல் மின் வாரிய சொத்தை ஜியோ நிறுனவனம் ஆக்கிரமித்துள் ளது. இது குறித்து, போடி மின்வாரிய அதி காரியிடம் கேட்ட போது, உயர் அலு வலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட நிறுவனங்க ளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள் ளது. அதிகாரிகள் உத்தரவிட்டால் நட வடிக்கை எடுப்போம் என்றார்.