மதுரை, ஏப்.4- பாசிச பாஜகவின் அச்சுறுத்த லில் இருந்து இந்தியாவை காக்க ‘இந்தியா’ (I.N.D.I.A) கூட்ட ணிக்கு வாக்களிக்குமாறு, தமிழக மக்களுக்கு, தமிழ்நாடு ஜமாஅத் துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஜமாஅத் துல் உலமா சபையின் தலைவர் பி.ஏ. காஜாமுயினுத்தீன் பாகவி, பொதுச்செயலாளர் டாக்டர் வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி ஆகியோர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
“இந்திய நாடும் அரசியல் அமைப்புச் சட்டமும் பாசிச பாஜக அரசின் பிடியில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இந்த மக்கள் விரோத ஒன்றிய அரசை அகற்றியே தீர வேண்டும் என்று நாடு முழுவதிலும் மக்கள் தீர்மானமாக உள்ளனர். இந்த தேர்தலிலும் பாஜக வென்று விடு மானால் இனி நாட்டில் தேர்தலே நடைபெறாது என ஜனநாயக சக்திகள் அச்சம் தெரிவிக்கின்ற னர். எனவே, நாட்டிற்கு ஏற்பட் டுள்ள இந்த பேரபாயத்தை துடைத்தெறிவதையே ஒற்றை இலக்காக கொண்டு இந்த 2024 ஆம் ஆண்டின் மக்களவை தேர்த லில் தேசாபிமான சக்திகள் ஒன்றி ணைந்து பாடுபட்டு வருகின்ற னர்.
அந்த வகையில், தமிழ்நாட் டில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திமுக, விடு தலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மதச் சார்பற்ற ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு மக்களை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.