மதுரை, மார்ச் 11- மதுரை சிலைமான் அருகே உள்ள சக்குடியில் சனிக்கிழமையன்று ஜல்லிக் கட்டு நடைபெற்றது. இதற்காக அங்குள்ள முப்பிலி சுவாமி கோவில் திடலில் வாடி வாசல் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக் கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், விலங்குகள் நல வாரிய தலைவர் மிட்டல் ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்தி ரன்(புறநகர்), மா.கணேசன் (மாநகர்) மற் றும் மாயாண்டி, கலைச்செல்வன் ஆகி யோர் கலந்து கொண்டனர். அடங்காத காளைகளின் உரிமை யாளர்களுக்கும், அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் செல்போன், சைக்கிள்கள், பட்டுச் சேலைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில் போன்ற சிறப்பு பரிசுகள் வழங் கப்பட்டன. இதில் 493 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மாடுகள் முட்டியத்தில் பார்வையா ளர்கள், மாடுபிடி வீரர்கள் என 82 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 17 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே, காளைகளை அவிழ்த்து விடும் பகுதியில் சிலர் பிரச்சனை செய்து வந்ததால், போலீசார் லேசான தடியடி நடத்தினர்.