districts

அனைத்து பல்கலை.,களிலும் விசாரணை நடத்தலாம்: உயர்நீதிமன்றம்

மதுரை, செப்.2-  2019 ஆண்டு குரூப்-1 தேர்வு களில் தமிழ் வழியில் கல்வி பயின்ற தாக 20 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யப்பட்டதில், தமி ழகத்தில் உள்ள அனைத்து பல்க லைக்கழகங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த லாமே என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் 2019 ஜன வரி 1-ல் துணை ஆட்சியர், டிஎஸ்பி,  வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க அழைப்பு விடுத்தது.  அதற்கு நான் விண்ணப்பித்தி ருந்தேன். முதல்நிலைத் தேர்வில்  தேர்ச்சி பெற்று, எழுத்து தேர்வும் எழுதினேன். இதைத்தொடர்ந்து பிர தான எழுத்துத் தேர்வு அடிப்படை யில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு  செய்யப்பட்டோர் பட்டியல் டிசம்பர் 9 இல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழ்வழியில் கல்வி பயின்ற தற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு  செய்யப்படவில்லை.  இதுகுறித்து விசாரித்தபோது, தமிழ்வழியில் கல்வி பயின்ற தற்கான இட ஒதுக்கீட்டு சலுகை,  தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டி ருப்பது தெரியவந்தது. தொலை நிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்த மாக இருக்காது. தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்  களை ஆங்கில வழியில் பயில் கின்றனர், சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர்.  எனவே, இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத  இயலாது. டிஎன்பிஎஸ்சியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவிகித இட  ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்ற வர்களே பெற்று வருகின்றனர்.  

ஆகவே தமிழ்வழியில் கல்வி  பயின்றதற்கான சலுகை அடிப்ப டையில் தேர்வானவர்களுக்கு பணி  நியமன உத்தரவு வழங்க தடை  விதிக்க வேண்டும். தமிழ் வழியில்  பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வி யில் அல்லாமல் கல்லூரிக்கு  சென்று தமிழ் வழியில் பயின்ற வர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளி யிட்டு குரூப் 1 பணியிட நியமனத்தை  நடத்த உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், புகழேந்தி அமர்வில் சனிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில், இந்த  முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற் கொண்டு வருகிறது அதனுடைய இடைக்கால நில அறிக்கையை சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது.  தமிழ் வழி கல்வியில் போலிச் சான்றுகள் வழங்கியதாக இது வரை 5 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இதுகுறித்து விசா ரிக்கப்பட்டு வருகிறது என காம ராஜர் பல்கலை., தரப்பு வழக்கறி ஞர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிபதி கள் இதுபோல் தமிழகத்தில்  அனைத்து பல்கலைக்கழகங்களி லும் விசாரணை நடத்தலாமே என  கருத்து தெரிவித்து விசாரணையை  2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.