districts

குடிமனைப் பட்டா கோரி சிவகாசி வட்டாட்சியரகம் முன்பு சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

சிவகாசி, மே.18- சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளான டிகேஎஸ்  தங்கையா ரோடு,  ராணி அண்ணா காலனி,  போஸ்  காலனி,  நாரணாபுரம்,  எம்ஜிஆர் நகர்,  கண்ணகி காலனி,  கே.கே நகர். விஸ்வநத்தம் ஆகிய பகுதிகளில் வசிக்  கும் ஏழை, எளிய குடும்பத் தைச் சேர்ந்த பொது மக்கள்  பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகள் ஆகி யுள்ள நிலையில் எவ்வித நட வடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சிவகாசி  நகர்- ஒன்  றிய குழுக்கள் சார்பில் வட்  டாட்சியர் அலுவலகம் முன்பு  காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நகர் செயலாளர் ஆர்.  சுரேஷ்குமார், ஒன்றிய செய லாளர் பி.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயற்  குழு உறுப்பினர்கள் பி.என். தேவா, கே.முருகன்  ஆகி யோர் உரையாற்றினர்.

மேலும் இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிளை  செயலாளர்கள் அன்னத் தாய்,  கௌரி,  மாரிச்சாமி, நகர்குழு உறுப்பினர்கள் ஜெபஜோதி,  மாடசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தை  தகவலறிந்து சிவகாசி  வட்டாட்சியர்  பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ராணி அண்ணா காலனி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உதவி இயக்குநருக்கு  முன் மொழிவு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது என வும், எம்.ஜி.ஆர். காலனி,  ஏஎஸ்கேடி.  தங்கையா ரோடு, முருகன் காலனி, புதுத் தெரு, பிச்சாண்டி தெரு, கே.கே. நகர், விஸ்வ நத்தம் ஆகிய  பகுதி மக்க ளுக்கு, எம்.புதுப்பட்டி  காளையார்குறிச்சி பகுதி களில் தேர்வு செய்யப்பட்  டுள்ள நிலத்தில், முன்னு ரிமை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டா வழங்க  நட வடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும்  கண்ணகி காலனி -எம்.ஜி.ஆர் நகர் பகுதி மக்க ளுக்கு பட்டா வழங்கிட வரு வாய் ஆய்வாளர் ஒப்புதலுக்  காக முன்மொழிவு வைக்கப் பட்டுள்ளது. வந்தவுடன் பட்டா வழங்கிட உரிய நட வடிக்கை எடுக்கப்படும். கே.கே.நகர் பகுதியில் வழங்கப்பட்ட பட்டாக்களின் விவரங்கள் கிராம கணக்  கில்  பதிவேற்றம் செய்ய நட வடிக்கை மேற்கொள்ளப் படும். போஸ் காலனி பகு தியில் குடியிருக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்க   விரை வில் வரன்முறைப்படுத்தி  நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.   இதை யடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.