districts

சாலைக்கிராமத்தில் பாசன வாய்க்கால் மாயம்

சிவகங்கை, ஆக.6- இளையான்குடி அருகே சாலைக்  கிராமத்தில் பாசன வாய்க்காலை காணவில்லை என அப்பகுதி விவ சாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி வட்டம் சாலைக்கிராமத் தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்  டில் பெரிய கண்மாய் உள்ளது. மழை  காலத்தில் கண்மாயில் தேங்கும் நீரை, பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு அப்பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்த னர். விவசாயிகள் அடையாளம் காணும்  வகையில் ஒவ்வொரு வாய்க்கா லுக்கும் தனித்தனி பெயர்கள் வைத்து அழைத்து வந்தனர். இந்நிலையில் கண்மாய் மடை யிலிருந்து வடக்கு சாலைக்கிராமம் பகுதியில் கொல்லம்பட்டரை வாய்க்  கால் எனும் 4 மீட்டர் அகலத்தில், இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பாசன வாய்க்கால் உள்ளது. சுமார்  300 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு தண்ணீரை வழங்கி, விவசாயத்தை  வளர்த்த இந்த வாய்க்கால் தற் போது இருந்த இடம் தெரியாமல் உள்ளது. வாய்க்கால் மண் மேடாகி யும், சேதமடைந்தும் உள்ளது . சில இடங்களில் வாய்க்கால் இருந்த தடயமே இல்லாத அளவுக்கு தூர்ந்து போயுள்ளது. அதனால் இந்த வாய்க்காலை நம்பியுள்ள நிலங்கள், தண்ணீர் செல்ல வழி யில்லாமல் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து கடந்த இரண்டு ஆண்டு களாக சாலைக்கிராமம் கிராம சபை  கூட்டத்தில் காணாமல் போன வாய்க்  காலை கண்டுபிடித்து தருமாறு விவ சாயிகள் சார்பில் புகார் அளித்துள்ள னர். ஆனால் சம்பந்தப்பட்ட அதி காரிகள் இதுகுறித்து நடவடிக்கை  எடுக்கவில்லை. அதனால் விவ சாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக வும், மாயமான பாசன வாய்க்காலை மீட்டு, சர்வே செய்து பயன்பாட்டிற்கு  கொண்டுவர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி நல்ல தம்பி கூறுகையில், இந்த கொல்லம்  பட்டரை வாய்க்கால் பல ஆண்டு களாக மாயமாகி உள்ளது. சில  இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. அதனால் சுமார் 300  ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாதிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சி யர் மற்றும் ஆர்டிஓ உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  நீர் பாசன கமிட்டி தலைவர் கரு ணாகரன் கூறுகையில், இந்த மாய மான வாய்க்காலால், நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மழை காலத்தில் தண்ணீர் வீடு களுக்குள் செல்கிறது. தண்ணீர் வழிய வசதியில்லை. அதனால் விவ சாயம் கேள்விக்குறியாகும் நிலை  உள்ளது. சில இடங்களில் ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். சர்வே செய்து  தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்  டும் என்றார்.