districts

img

தேனியில் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மேம்படுத்தப்படும்

தேனி, ஜூலை 16- தேனிமாவட்டத்தில் உள்ள  அனைத்து சுற்றுலாத் தலங்களும்  மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்  படும் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை  அமைச்சர் ராமச்சந்திரன் தெரி வித்துள்ளார். தேனி மாவட்டத்திற்கு ஞாயிறன்று வருகை தந்தஅமைச்சர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன்ஆலோசனையில் ஈடுபட்டார். வைகை அணையில் செயல்படும் தமிழ்நாடு ஓட்டலில் நடை பெற்ற இந்த ஆலோசனையில் தேனி  மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, ஆண்டி பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகா ராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எல்.மூக்கையா, போடி லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள்  குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந் தார்.

தேனி மாவட்டத்தில் உள்ள  10 சுற்றுலா தலங்களை மேம்படுத்த நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சி யர் ஷஜீவனா அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இதேபோல ஆண்டிபட்டி அருகே உள்ள சின்ன  சுருளி அருவியில் பல்வேறு வசதி களை செய்து கொடுத்து மேம்படுத்த வேண்டும் என்று ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் கோரிக்கை விடுத்தார். இதுதவிர தேனியில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாய் மற்றும் வைகை அணையில் படகு சவாரி  தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்திந் தித்த அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: சுற்றுலா தலங்களை மேம்படுத்த  அரசு சிறப்பு திட்டம் ஒன்றை தயா ரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுலா வளர்ந்தால் அதன்மூலம் நாட்  டின் பொருளாதாரம் வளரும். அதன் படி மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள  சுற்றுலா தலங்களுக்கு கடந்த ஆண்டு  மட்டும் 37 லட்சத்து 63 ஆயிரம் சுற்று லாப் பயணிகள் வந்து சென்றுள்ள னர். அதன்படி பார்த்தால் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ, தோரா யமாக ரூ.2500 ஆயிரம் கோடி வரு வாய் வந்திருக்கலாம். இதன்காரண மாகத் தான் தற்போது சுற்றுலா தலங்  களை மேம்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. சுற்றுலா தலங்களில் தங்குமிடம், தரமான ஓட்டல்கள், கழிப்  பிடம் உள்ளிட்ட அனைத்து விதமான  அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.