சென்னை, ஜன. 16- சென்னை நந்தம்பாக்கத்தில் 2 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி செவ்வாயன்று (ஜன. 16) தொடங்கி யது. உலகத் தரமான இலக்கிய படைப்பு கள் தமிழில் வெளியாகின்றன. ஆனால் உலகளவில் தமிழ்ப் படைப்புகளை கொண்டு சேர்ப்பதில் ஒரு தொய்வு நிலவுகிறது. மிகக் குறைந்த மக்களால் பேசப்படுகிற, மிகக் குறைந்த வர லாற்றை உடைய மொழிகளில் எழுது பவர்கள் கூட உலகளவில் வாசகர் களை பெறுகின்றனர். காரணம் அவர்க ளின் படைப்பு ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பிற நாடுகளில் உள்ள மொழிகளிலும் மொழி பெயர்க் கப்படுகிறது. தமிழ் படைப்புகளையும் உலக அளவில் கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு சர்வதேச புத்தக கண்காட்சியை கடந்த ஆண்டு நடத்தியது. உலகின் சிறந்த நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க் கப்படுவதற்கும், நமது தரமான படைப்பு கள் உலக வாசகர்களை அடைவதற் கும் வழி அமைத்துக் கொடுக்கும் வித மாக சர்வதேச புத்தக கண்காட்சி அமைந்தது. கடந்த ஆண்டு முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சி தமிழ்நாட்டில் நடை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னை நந்தம்பாக் கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசுகையில், நந்தனத்தில் தொடங்கிய நிகழ்வு நந்தம்பாக்கத் திற்கு வந்துள்ளது. தொடர்ந்து இந்த புத்தக கண்காட்சி உலக நாடுகளுக்கு செல்லும். இந்த புத்தகக் கண்காட்சி யில் கடந்த ஆண்டு 100 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த ஆண்டு 40 நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த சர்வதேச புத்தக கண்காட்சிக்கு வந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த சர்வதேச புத்தக கண்காட்சி எல்லா நாடுகளுக்கும் சென்றடையும். ஏற் கெனவே தமிழில் வெளிவந்த கொரோனா குறித்த புத்தகம் செயற்கை நுண்ணறிவு வாயிலாக மொழி மாற்றம் செய்யப்பட்டு corona chronicles எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலக எழுத்தாளர்களுக்கெல்லாம் மூலமானவரான திருவள்ளுவர் தினத்தில் இந்த புத்தக கண்காட்சி தொடங்கி இருப்பது மகிழ்ச்சி என்றார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், இலக்கி யங்களை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழ் இலக்கியங்களை வெளியுலகுக்கு கொண்டு சேர்க்கவும், வெளி உலக இலக்கியங்களை தமிழுக்கு மாற்றவும் தான். இதுவரை 52 தமிழ் புத்தகங்கள் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது என்றார். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு செல்லும் படைப்புகளுக்காக மொழிபெயர்ப் பிற்கான மானியமாக 3 கோடி ரூபாய் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.