விருதுநகர், மே 9- விருதுநகரில் ஒரு கும்பல் கந்து வட்டி கொடுமை செய்து வருவதாகவும், பணம் தர மறுத்தால் கொலை மிரட்டல் விடுப்பதாக வும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நடவடிக்கை கோரி மனு அளித்தனர். விருதுநகர் ஒன்றியம், ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்டது ஜக்கம்மாள்புரம். இப்பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு அய்யனார் நகரைச் சேர்ந்த பெல்ட்டு மாரி யப்பன் என்பவரிடம் ரூ.11 ஆயிரம் கடன் வாங்கினாராம். இதற்கு வட்டியாக தற்போது வரை ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை கட்டி யுள்ளார். இந்நிலையில், அவரது மகன் பொன்னையா என்பவர், வேல்முருகன் வீட்டிற்குச் சென்று மேலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் தர வேண்டும். அல்லது குடும்பத் துடன் கொளுத்தி கொன்று விடுவேன் எனக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட வேல்முரு கன், தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்திற்கு வந்தார். கந்து வட்டி கொடுமையுடன் கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார்.