விருதுநகர், ஜூலை 23- விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் உள் நோயாளிகளை எக்ஸ்-ரே எடுக்க நீண்ட தூரம் அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள முதல் தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் திடீரென பாதிக் கப்படுவோர் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு அங்குள்ள மருத்துவர்கள் சிகிச்சை யளிக்கின்றனர். பின்பு, அவசர சிகிச்சை பிரி வுக்கு அனுப்பி வைக்கின்றனர். நோயாளி களுக்கு உடலின் உள் பகுதியில் எலும்பு களின் நிலை குறித்து அறிந்து கொள்ள அங்குள்ள மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க அறிவுறுத்துகின்றனர். இதையடுத்து, மருத்துவமனை உதவி யாளர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து நோயா ளியை சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவமனையின் அடுக்குமாடி பகுதியிலி ருந்து சற்று தொலைவில் உள்ள பழைய கட்டி டத்தில் இயங்கி வரும் டிஜிட்டல் எக்ஸ்-ரே மையம் வரை கொண்டு செல்ல வேண்டி யுள்ளது. பின்பு, மீண்டும் சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையும் உள்ளது. இதனால், காலதாமதம் ஆவதுடன், நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் டிஜிட்டல் எக்ஸ்-ரே மையத்தை உடனடியாக புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்தால் இதுபோன்ற சிரமத்தை தவிர்க்க லாம். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர், பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் டிஜிட்டல் எக்ஸ்-ரே மையத்தை உடனடியாக புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி மருத்துவ மனை கட்டிடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டு மென என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.