திருவில்லிபுத்தூர், ஆக.24- திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை.,யில் 2023-2024 கலை, அறிவியல், மேனேஜ்மென்ட் மற்றும் முதுகலை மாண வர்களுக்கான பத்து நாள் புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இணைவேந்தர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் எஸ்.நாராயணன் வரவேற்றார். பதிவாளா் வே.வாசுதேவன், முதலா மாண்டுத் துறை டீன் சி.ராமலிங்கன், டச்மார்க் டீசயின்ஸ் கம்பெனி இயக்குநர் சி.இ.ஒ பாரதி ராஜா தங்கப்பழம், மாணவர் சேர்க்கை அதிகாரி டீன் ஏ.லிங்குசாமி ஆகியோர் பங்கேற்றனர்.