districts

img

தொடர் மழையால் அத்திகோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

விவசாயிகள் மகிழ்ச்சி திருவில்லிபுத்தூர், மே 6- திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால்  அத்திகோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இத னால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.   விருதுநகர் மாவட்டம், திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், மா, பலா, தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்  களுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலை  அடிவாரப்பகுதிகளில் மழை பெய்யாத தால் ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி  வறண்டு காணப்பட்டது. இதனால் நெல் வயல்கள் வறண்டு, விவசாயிகள், தண் ணீரை விலைக்கு வாங்கும் சூழல் நிலவி யது. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை நன்கு பெய்ததால், மா மரங்கள் வழக் கத்தை விட அதிகமாக பூத்து குலுங்கின. ஆனால் அதன்பின் மழை இல்லாததால் மா மரங்களில் பிஞ்சுகள் உதிர்ந்த தால் விவசாயிகள் கவலை அடைந்த னர். இந்நிலையில் கடந்த ஒரு வார  காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த  ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட் டது.  தொடர் மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் பிரதான ஆறுளில் ஒன்றான அத்திகோவில் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஆறு மூலம் கான்சா புரம், வ.புதுப்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் பல நூறு ஏக்கர்  விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவ தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.