சிவகங்கை, மார்ச்.2- சிவகங்கை நகராட்சியில் 27 ஆவது வார்டு உறுப்பினர் துரைஆனந்த், 2வது வார்டு உறுப்பினர் கார்கண்ணன் , நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப் கான், ஜெய காந்தன், மகேஷ் குமார், வண்ணம்மாள், சேதுநாச்சியார், விஜயகுமார் ஆகி யோர் உள்ளிட்டோர் 27 நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட நகர்மன்ற உறுப்பினர்களை திமுக மாவட்ட துணை செயலாளரும், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவருமான மணி முத்து வாழ்த்தி சால்வை அணிவித்தார். மானாமதுரை நகர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மாரியப்பன் கென்னடி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் 27 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். திமுக கூட்டணி நகர்மன்ற உறுப்பி னர்களை திமுக நகர செயலாளர் பொன் னுச்சாமி, மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை ஆகி யோர் வாழ்த்தி துண்டு அணிவித்தனர். திருப்புவனம் சேங்கை மாறன் உள்ளிட்ட 18 பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.