districts

img

சிவகங்கையில் அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சி திறப்பு

சிவகங்கை, ஏப்.30- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்  புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏப்ரல் 29 அன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.     இப்புகைப்படக் கண்காட்சியில், தமி ழக அரசால் செயல்படுத்தப்பட்;டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும்  முதல மைச்சர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அதன் பயன்கள் உள்ளிட்டவைகள் தொடர்பாக, பல்வேறு புகைப்படங்கள்  இடம் பெற்றுள்ளன.  சிவகங்கை மாவட்ட மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன்  கேட்டுக்கொண்டார்..      இந்நிகழ்ச்சியில்  திருப்புவனம் பேரூ ராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி  ஒன்றியக்குழுத் தலைவர்கள்  மஞ்சுளா பால சந்தர் (சிவகங்கை),  லதா அண்ணாத்துரை  (மானாமதுரை), சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பா.செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம், ஏபிஆர்ஒ ராஜாசெல்வன் மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.