இராமநாதபுரம், ஆக.25- இராமநாதபுரம் மாவட்டம் திருப் புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓஎன்ஜிசி காரைக்கால் நிறுவனம் சார்பில் கிராமப்புற பெண் களுக்கான திறன் வளர்ப்பு திட்டம், சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாமின் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சி முகாமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா அனிப் துவக்கி வைத்தார். பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடை பெறும். மேலும் ஓஎன்ஜிசி மூலம் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்புப் பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங் கள் வழங்குதல், இரண்டு கிராமங்க ளுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், காரைக்கால் நிறு வனத்தின் மேலாளர்கள் ஆர்.ரவிக் குமார், ஜெ.விஜயகண்ணன், தங்க மணி மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.