districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மக்கள் பணியாற்றி மறைந்த தலைவர்கள் படத்திறப்பு

தேனி, ஆக.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றி மறைந்த  தலைவர்களின் படத்திறப்பு நிகழ்வு கம்பத்தில் நடைபெற்றது . கம்பத்தில் மறைந்த தலைவர்கள் ருக்மணி, பி.முருகேசன் ,ஆசிரியர் சின்ராஜ், எஸ்.கனகராஜ் ஆகியோ ரது படத்திறப்பு ஞாயிறன்று நடைபெற்  றது. ஏரியாச் செயலாளர் கே.ஆர்.லெனின் தலைமை வகித்தார். மாநிலச்  செயற்குழு கே.பாலபாரதி மறைந்த தலைவர்களின் படங்களைத் திறந்து  வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.வி. அண்ணாமலை தலைவர்களின் அரிய  பணிகளை நினைவு கூர்ந்தார். மூத்த  தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்தி ரன், வெண்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்வேல், பி.ஜெயராஜ்,  பி.ஜெயன், சிஐடியு மாவட்டத் தலை வர் ஜெயபாண்டி, மாவட்டப் பொருளா ளர் சண்முகம், மோகன், ஸ்ரீராமன், அய்  யப்பன், பாலகுருநாதன், காஜா மைதீன், நித்தியகுமார், முருகன், வெற்றி கணேஷ், சித்திகா பர்வீன், விஜ யகுமார் மற்றும் மறைந்த தோழர் களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.