சிவகங்கை, செப். 8- சிவகங்கை மாவட்டம் பிரான்மலை யில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மரு த்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை யின் சார்பில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்வில் ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேசு கையில், சிவகங்கை மாவட்டத்தில், சிவ கங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ரூ.20 கோடி மதிப்பில், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டிடம், ரூ.10.50 கோடி மதிப்பில் மகப்பேறு மருத்துவம் மற்றும் பச்சி ளங்குழந்தை பராமரிப்புப் பிரிவு கட்டிடம், இது தவிர ரூ.4.34 கோடி மதிப்பில் திருப்பத்தூர்
அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக் கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் ரூ.50 லட்சம் மதிப்பில் முத்தனேந்தல் வட்டார பொது சுகாதார அலகுக் கட்டிடம், ரூ.80 லட்சம் மதிப்பில் சிவகங்கை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.75 லட்சம் மதிப்பில் செஞ்சை - நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.75 லட்சம் மதிப்பில் முத்துப் பட்டிணம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.75 லட்சம் மதிப்பில் தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மாரநாடு, விராமதி, புளியால் ஆகியவைகளில் தலா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 6 துணை சுகாதார நிலை யங்கள் மற்றும் காரைக்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் ரூ.10.75 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவு கட்டிடம், சிவ கங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை மையம் ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகங்க ளையும், பத்து பயனாளிகளுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகங்களையும், பத்து பய னாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகளை யும் வழங்கினர்.