districts

மதுரை முக்கிய செய்திகள்

அரசுப்பணி பயிற்சி வகுப்பு துவக்கம்

இராமநாதபுரம்,மே.30- ஒன்றிய அரசுத்துறை சார்ந்த தேர்வுக்கான ஒருங்கி ணைந்த பயிற்சி வகுப்புகளை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.  ஒன்றிய அரசு துறை சார்ந்த எஸ்.எஸ்.சி, ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு கள் தமிழக அரசின் ‘நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இராம நாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தொடக்க நிகழ்ச்சி திங்கட்  கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.   தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இது போன்று எஸ்.எஸ்.சி. வங்கி தேர்வு,ரயில்வே பணிக்கென  வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்த பயிற்சியை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.  இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் செ.மதுக்குமார், அருண்நேரு மற்றும் திறன்பயிற்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தூர் அருகே பெண் படுகொலை

சாத்தூர், மே 30- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்  பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவரது மனைவி ராஜேஸ்வரி(40). இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகமடைந்த முத்துப்பாண்டி தொடர்ந்து  சண்டையிட்டு வந்துள்ளார்.  இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதை யடுத்து, இருவரும் சமாதானம் அடைந்து மீண்டும் சேர்ந்து  வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராஜேஸ்வரி சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு  கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு

ஒட்டன்சத்திரம், மே 30-  ஒட்டன்சத்திரம் அருகே வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து ரூ 1.75 லட்சம் திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே  உள்ள அத்திக்கோம்பையில் ஆசிரியர் காலனியில்  வசித்து வருபவர் செல்வராணி. இவர் காளாஞ்சிபட்டி யில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் அலுவலக உதவி யாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை செல்வராணி ,அவரது கணவர் கணேசன்  ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு புதிய வீடு கட்டுமானப்பணி யை பார்ப்பதற்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டுக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ  பூட்டை உடைத்து, ரூ.1.75 லட்சம் திருடப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து செல்வராணி ஒட்டன்சத்திரம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கியவர் கைது

கடமலைக்குண்டு, மே 30- மயிலாடும்பாறை போலீசார் நேற்று முன்தினம் இரவு  பொன்னன்படுகை பகுதியில் வழக்கமான ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது பண்டாரவூத்து செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்த  சின்னன் (வயது 57) என்பவரின் தோட்ட பகுதியில் இருந்து  துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீ சார் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற் குள் இருந்த அலுமினிய பாத்திரத்தில் சுமார் 20 லிட்டர் சாரா யம் ஊறல் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்த னர். அப்போது அங்கு வந்த சின்னன் போலீசாரை தோட்  டத்தை விட்டு வெளியேறுமாறு தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினார். மேலும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாத்திரத்தில் ஊறல்  போடப்பட்டிருந்த சாராயத்தை கீழே கொட்டி அழித்த  போலீசார் சின்னனை கைது செய்து மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணைக்கு பின்பு சாராய ஊறல் பதுக்கி வைத்தது,  காவல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  சின்னன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேக்கம்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

காவல் அதிகாரியை கொல்ல  முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், மே 30- அபராதம் விதித்த சிறப்பு சார்பு ஆய்வாளரை  கொலை  செய்ய முயன்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை  விதித்து திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை தீர்ப்பளித்தது.  விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் நகர் காவல்  நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளராக  இருப்பவர் தர்மராஜ். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு  திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் போலீஸாருடன் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டி வந்த  வெங்கடேஷ் (26), என்பவரை நிறுத்தி சோதனை செய்தார். இதில், ஓட்டுனர் உரிமம் இல்லாதது தெரியவந்தது.  அத னால் அவருக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது.  இதையடுத்து அன்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜூவை,  தகாத வார்த்தைகளால் திட்டிய வெங்கடேஷ் கத்தி யால் குத்திக் கொலை செய்ய முயன்றார்.  இதுகுறித்து தர்மராஜ் அளித்த புகாரின்பேரில் திருவில்லிபுத்தூர் நகர்  போலீஸார் கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்தனர்.   இவ்வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள  தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இதில் குற்றவாளி வெங்கடேஷிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7,500 அப ராதம் விதித்து நீதிபதி எம்.ப்ரீத்தா தீர்ப்பளித்தார். அரசு  தரப்பில் வழக்கறிஞர் பட்டுராஜன் ஆஜரானார்.

வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மே 30- திருச்சி மாவட்டம் துறையூரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கிய  நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும்  அவரது கூட்டாளி தனபால் ஆகியோரை கைது செய்து  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று   வலியுறுத்தி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளா கத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்  நாடு வருவாயத்துறை அலுவலர் சங்கம் சார்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயலாளர் சுகந்தி  மாவட்டத்தலைவர் பாஸ்டின்,  எஸ்.அக்பர் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சுழி பகுதியில் வளர்ச்சித் திட்டப்  பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சுழி, மே 30- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியம், சவ்வாசுபுரம் ஊராட்சி யில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா மரக்கன்றுகள் நடவு செய்த பணிகளை ஆய்வு செய்தார்.  பின்பு, குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணி, ரூ.5  லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணி, கல்லூரணி யில் ரூ.5 லட்சத்தில் தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் ரூ.1.5  லட்சத்தில் கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் முத்துராம லிங்கபுரத்தில் ரூ.1.5 லட்சத்தில் கால்வாய் சீரமைக்கும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பொம்மகோட்டை, புல்லநாயக்கன்பட்டி மற்றும் காளையார் கரிசல்குளத்தில் தலா ரூ.2.5 லட்சத்தில் தடுப்ப ணைகள் கட்டும் பணி, பரளச்சியில் ரூ.5 லட்சத்தில் தடுப்பணை அமைத்தல், ரூ.11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டுவரும் சமுதாயக்கூடம் விரி வாக்க பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

சட்டமன்ற உறுதிமொழிக் குழு  இன்று தேனி வருகை 

தேனி, மே 30- பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையிலான தமிழ் நாடு சட்டமன்ற உறுதிமொழிக்குழு புதன்கிழமை தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழிக் குழு (31.05.2023) அன்று குழு தலைவர் / வேல்முருகன் அவர்கள் (பண்ருட்டி) தலைமை யில் சட்டமன்ற குழு உறுப்பினர்கள் தேனி மாவட்டத்தில் அர சுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலு வலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.  வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் கே.அண்ணாதுரை (பட்டுக் கோட்டை), ஆர்.அருள் (சேலம் மேற்கு), ஐ.கருணாநிதி (பல்லாவரம்), சக்கரபாணி (வானூர்), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்),ஆர்.மணி (ஓமலூர்),ரூபி ஆர்.மனோகரன் (நாங்குனேரி),எம்.கே.மோகன் (அண்ணா நகர்), பி.ராம லிங்கம் (நாமக்கல்),ஏ.சி.வில்வநாதன் (ஆம்பூர்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.