districts

img

திண்டுக்கல் மாநகராட்சியில் 3 சிபிஎம் கவுன்சிலர்கள் பதவியேற்பு

திண்டுக்கல், மார்ச்.2- திண்டுக்கல் மாநகராட்சியில் வெற்றி பெற்ற சிபிஎம் கவுன்சிலர் கள் பதவியேற்றுக் கொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சியில் புதனன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் 2வது வார்டில் போட்டி யிட்டு வென்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் கே.எஸ்.கணேசன், 11வது வார்டில் வென்ற  மாரியம்மாள், 35வது வார்டில் வென்ற  எஸ். ஜோதிபாசு ஆகியோர் கவுன்சிலர் களாக பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஆர்.சச்சிதானந் தம், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஆஸாத், நகரச் செயலாளர் அரபுமுகமது உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.