districts

மதுரை முக்கிய செய்திகள்

தோழர் என்.கே.நடராஜன் காலமானார்

திண்டுக்கல், டிச.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனி னிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் அவர்கள் டிசம்பர் 10 அன்று மாலை 6 மணி யளவில் கட்சி அலுவலகத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  உடனே தோழர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். அங்கு சிகிச்சை பலனின்றி என்.கே.நடராஜன் தனது  சுயநினைவை நிறுத்திக் கொண்டார். தோழரின் உடல் அவ ரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் அருகே உள்ள அரசப்பபிள்ளைபட்டியில் மக்கள் அஞ்ச லிக்காக வைக்கப்படுகிறது. இறுதி நிகழ்ச்சி அரசப்ப பிள்ளை பட்டியில்  நடைபெறுகிறது. தோழரது மறைவுக்கு சிபிஐ (எம்-எல்) திண்டுக்கல் மாவட்டக்குழு  ஆழ்ந்த இரங்  கலை தெரிவித்துள்ளது.

விவசாயிகள் சங்க பேரவை 

இராமநாதபுரம், டிச.10- இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி சிக்கலில் தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா பேரவை  பெரிய சாமி தலைமையில் நடைபெற்றது. துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் பேசினார். மாவட்டத் தலைவர் முத்துராமு நிறைவுரையாற்றினார். பேரவையில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்ட னர். தாலுகா தலைவராக ராமசாமி, செயலாளராக சுப்ர மணியன், பொருளாளராக நிகார் சுல்தான், துணைத்தலை வராக ஆறுமுகம், துணைச் செயலாளராக பெரியசாமி ஆகியோர்  உள்பட 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்  யப்பட்டது.

தேனி: இரு வேறு சம்பவங்களில்  வாகனம் மோதி  இருவர் பலி 

தேனி, டிச.10- இருவேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலியானது தொடர்பாக காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   தேனி அருகே முத்துதேவன்பட்டியை சேர்ந்தவர் ரத்தீஷ்குமார் (வயது 38).இவர் டிரைவர் வேலை பார்த்து  வந்தார். சம்பவத்தன்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால் தனது மோட்டார் சைக்கிளில் வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அப்போது அவ்வழி யாக வேகமாக வந்த வாகனம் ரத்தீஷ்குமார் மீது மோதி  விட்டு நிற்காமல் சென்றது. இதில் தலை நசுங்கி அவர்  சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வீர பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.  கூடலூர்  கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் (வயது80). லோயர்கேம்ப் பகவதியம்மன் கோவில் அருகே சாலையை கடக்க முயன்ற போது  அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். இது குறித்து குமுளி காவல்நிலையத்தில்   வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவரை மிரட்ட  நாடகமாடிய மனைவி பலி 

தேனி, டிச.10-  குடிப்பழக்கத்திற்கு ஆளான கணவரை திருத்த, மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியவர் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் பலியானார். தேனி மாவட்டம், சின்னமனூர் லுத்தரன் மிஷன்  கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ் மனைவி சசி  பிரபா (வயது 29). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை  பார்த்து வந்த சரண்ராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சம்பவத்தன்று தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவ தாக தெரிவித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசி பிரபா பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏர்வாடி நகரில் முறையாக குடிநீர் விநியோகம் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், டிச.10- இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி கிழக்கு தாலுகா ஏர்வாடி நகரில் காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்க வேண்  டும். கூட்டுக் குடிநீரேற்ற தொட்டி அமைத்துத் தர வேண்டும். மீனவர் வசிக்கும் சுற்று வட்டா ரப் பகுதிகளில் தார்ச்சாலை, தர்கா பகுதி யில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை மற்றும் புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கடலாடி கிழக்கு தாலுகாக்குழு சார்பாக ஏர்வாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர்  நம்புராஜன் தலைமை வகித் தார். எம்.பி.முருகேசன், சக்திகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துராமு,  தாலுகா செயலாளர் எஸ்.போஸ் தாலு காக்குழு உறுப்பினர்கள் கே.பச்சமால், ராம சாமி ஆகியோர் பேசினர்.

விருதுநகர் சந்தையில் பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை உயர்வு

பாமாயில் விலை சரிவு

விருதுநகர், டிச.10- விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை  சற்று குறைந்தது. அதேவேளை, பாசிப் பருப்பு மற்றும் தொலி உளுந்தம் பருப்பின் விலையானது உயர்ந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டி யல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகி றது. அந்த வகையில், பாமாயில் விலை யானது கடந்த வாரத்தை விட சற்று குறைந்  துள்ளது. அதாவது, கடந்த வாரம் 15 கிலோ பாமாயிலின் விலையானது ரூ.1570க்கு விற்  பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த  வாரம் ரூ.40 குறைக்கப்பட்டு ரூ.1530க்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு விலை உயர்வு பாசிப் பருப்பின் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரம்  குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9700-க்கு விற் பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.100  உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.9800க்கு விற்கப்படுகிறது. தொலி உளுந்து விலை உயர்வு கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த   தொலி உளுந்தம் பருப்பின் விலையானது, இந்த வாரம் ரூ.200 உயர்ந்து தற்போது ரூ. 9400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500க்கு விற்பனை செய்யப் பட்டு வந்த கடலை புண்ணாக்கின் விலை யானது, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து தற்போது ரூ.4600க்கு விற்கப்படுகிறது. பிற  அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை.