districts

img

டீசல் மீது 7 மடங்கு வரி கூட்டிய மோடி அரசு மாநில அரசுகள் மீது பழிசுமத்துவதா?

நாகர்கோவில், மே 3- மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய திலிருந்து டீசல் மீது 7 மடங்கு வரியை கூட்டிய மோடி அரசு வரியை கூட்டாத மாநில அரசுகள் மீது விலை உயர்வுக்கான பழியை சுமத்த  முயல்கிறது என எஸ்.நூர்முகமது குறிப் பிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மேதினம் மற்றும் தோழர் டி.மணியின் 10 ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம் ஞாயி றன்று (மே 1) நடந்தது. வட்டார செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், வி.அனந்தசேகர்,விஜயமோகன் ஆகியோர் பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது மேலும் பேசுகையில், மோடியின் ஆட்சியில் உழைப்பாளி மக்கள் உரிமைக ளை இழந்து தவிக்கிறார்கள். மோடியோ தினமும் ஒரு கோலம் பூண்டு பேஷன் ஷோ நடத்துகிறார். அவர் ஒரு வேடதாரி என்பது உடையில் மட்டுமல்ல ஆட்சி முறையிலும் வெளிப்பட்டு வருகிறது. குஜராத்தில் முதல்வ ராக இருந்தபோது வெறுப்பு அரசியலை விதைத்து சிறுபான்மை மக்கள் கொன்று குவிக்கப்பட்டதை மறந்துவிடக்கூடாது.

பிரதமர் ஆன பிறகு ஒரே ஒரு நள்ளிரவு அறிவிப்பு மூலம் பணமதிப்பு நீக்கம் செய்து நாட்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி னார். பின்னொருநாள் எவ்வித முன்னேற்பாடு களும் இல்லாமல் ஜிஎஸ்டியை திணித்து லட்சக் கணக்கான சிறுதொழில்களை முடக்கினார். கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கியதும் திடீரென பொதுமுடக்கம் அறிவித்து வாகனங் கள் இயக்கத்தையும் நிறுத்தியதால் கோடிக்க ணக்கான மக்கள் பசி பட்டினியோடு சொந்த ஊர்களுக்கு பலநூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்றார்கள். அதில் ஏராளமானோர் செத்து மடிந்த காட்சிகளை நாம் காண நேர்ந்தது. ஜிஎஸ்டி மீண்டும் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது. அனைத்து பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி விதிக் கப்பட்டுள்ளது. விலைவாசி கூடுகிறது. இப்படியே சென்றால் இலங்கையைப்போல் இந்தியா ஆகிவிடும் என பொருளாதார நிபு ணர்கள் எச்சரிக்கிறார்கள். 2014 இல் மோடி பிரதமரானபோது பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி லிட்டருக்கு ரூ.9.48 ஆகவும், மாநில அரசின் வரி ரூ.11.52 ஆகவும் இருந்தது. இப்போது ஒன்றிய அரசின் வரி மூன்று மடங்கு அதிகரித்து ரூ.27.90 ஆக உள்ளது. ஆனால் தமிழக அரசு தனது வரியில் மூன்று ரூபாயைக் குறைத்ததால் ரூ.8.52 ஆக மாநில வரி சுருங்கியுள்ளது. டீசல் மீது ஒன்றிய அரசின் வரி ரூ.3.62 ஆக இருந்தது. தற்போது சுமார் 7 மடங்கு அதிகரித்து ரூ.21 ஆகி இருக்கி றது. மாநில அரசின் வரி உயர்த்தப்படாமல் ரூ.9.62 இல் நீடிக்கிறது. ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் வரி குறைக்காததே காரணம் என மோசடித்தனமான அறிவிப்பை பிரதமர் வெளியிடுகிறார். இவ்வாறு பொய்யும் பித்தலாட்டமும் கொண்டவராக பிரதமர் மோடி விளங்குகிறார்.  

அதிகரித்து வரும் வேலையின்மையால் இளைஞர்கள் குமுறுகிறார்கள். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மோடி முன்வர வில்லை. இதிலிருந்து மக்களை திசை திருப்ப  மீண்டும் மீண்டும் வெறுப்பு அரசியலை கையில் எடுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். மாட்டுக்கறியின் பெயரால் முகமது அக்லக், ஜுனைத் படுகொலைகள் போன்ற பல நிகழ்வு கள். வெறுப்பு அரசியலை முன்னெடுக்க உணவு,  உடை, மொழி போன்றவை பயன்படுத்தப்படு கின்றன. முஸ்லீம்கள் குறிவைத்து தாக்கப்  படுகிறார்கள். கெடுவாய்ப்பாக நீதிமன்றங்களும் இதற்கு துணை போகின்றன. ஆட்சியாளர்கள் நடத்தும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் அணிதிரள வேண்டும்.