மதுரை, ஏப்.12- நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு அனைத்து நன் மைகளும் கிடைக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்ட ணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்ட ணிக் கட்சிகளின் வேட்பாளர் களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, மதுரை நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆத ரித்து ஆனையூர், புதூர் பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுத்தி யல்- அரிவாள்- நட்சத்திரம் சின்னத் துக்கு வாக்கு சேகரித்தார். பிரச்சா ரத்தில் அவர் பேசியதாவது:
சு.வெங்கடேசன் நம்மவர்; நல்லவர்
“இங்கு நம்மவர் வருகிறார், நல்லவர் வருகிறார் என்று நோட் டீஸ் அடித்துக் கொடுத்திருக்கிறார் கள். நல்லவர் என்ற பட்டம் ஒரு ஆளுக்கு மட்டும் சொந்தமல்ல. வேட்பாளர் சு. வெங்கடேசன் நம்ம வர் மட்டுமல்ல, நல்லவரும்தான். நான் வருகிறேன் என்று நோட்டீஸ் அடித்திருந்தார்கள், இவர் (சு. வெங்கடேசன் வெற்றி பெற்று) வர வேண்டும் என்று நான் நோட்டீஸ் அடிக்கிறேன்.
இங்குள்ள மலைச்சாமிபுரத் தில் வட அமெரிக்க கமல் நற்பணி மன்றம் சார்பில் நம்மவர் படிப்பகம் அமைத்துள்ளோம். அது எங்க ளுக்குப் பெருமை. நான் ஏன் அர சியலுக்கு வர வேண்டும் என்று தீர் மானித்தேன் என்றால், நல்லது செய்ய வேண்டும் என்றால்கூட அனுமதி பெற வேண்டும் என்றுள்ள நிபந்தனைதான். அரசியல் ஒரு பலம். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டுதான், நான் அரசியலுக்கு வந்துள்ளேன். இவர் (வேட்பாளர் சு.வெங்கடேசன்) வந்த காரணமும் அதுதான்.
செய்ததையும் செய்யப் போவதையும் சொல்வோம்
வழக்கமாக அரசியலுக்கு ஏன் வந்தீர்கள், முதல் கையெழுத்து என்ன போடப் போகிறீர்கள் என்று கேட்பார்கள். நான் புதிய அரசியல் நாகரிகத்தை உருவாக்க வந்தி ருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொள்வேன். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. இனி நாம் செய்யப்போவதையும், செய்து இருப்பதையும்தான் சொல் வேன். செய்யத் தவறியவர்களின் குற்றங்களைப் பட்டியலிடுவது நேர விரயம். நவீன அரசியல் ஒரு வரையொருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக் கூடாது. ஒரு வரையொருவர் திருத்திக் கொள் ளும் அரசியலாக இருக்க வேண்டும்.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், எம்.பி. தொகுதி நிதி ஒதுக்கீடு ரூ.5 கோடி கிடைக்காத நேரத்தில் கூட, பல நற்பணிகளைச் செய்திருக்கிறார் சு. வெங்கடேசன். அவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க வேண்டியது உங்கள் கடமை. இந்த வட்டாரத்துக்கு நீங் கள் செய்யும் நன்மை அது.
நேர்மையும், நிமிர்வும் நம்மிடம் உள்ளது
காவல் கோட்டம், வேள்பாரி போன்ற முக்கியமான நாவல்களை எழுதிய நல்ல எழுத்தாளர் என்பதை விட, கிராமங்களுக்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து கொடுத்திருக்கிறார் என்பதே முக்கியமானது. அவர் செய்த நற்பணிகளைத் திரட்டி, வீடியோ ஆவணம் உருவாக்கி யிருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்குக் கிடைத்தது. இப் படி, தான் செய்த விஷயங்களைப் பட்டியல்போடும் நேர்மையும், நிமிர்வும் அவருக்கு இருக்கிறது.
அதுமட்டுமல்ல, தோழர் சு. வெங்கடேசன் ரூ.300 கோடிக்கு மேல் கல்விக் கடனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். பல ருக்கு கல்வி கற்கும் வாய்ப்பை ஏற் படுத்தித் தந்துள்ளார். இவருக்கு ‘கீழடி நாயகன்’ என்று பட்டமே இருக்கிறது. சிறந்த நாடாளுமன்ற வாதி. பிரதமர் மருத்துவ நிவாரண நிதியை மக்களைச் சென்றடையச் செய்ததில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தவர்.
செய்ததைச் சுட்டிக்காட்டுவோம்
தொடர்ந்து தொண்டு செய்த வர்களையும், மக்களையும் பிரிக்க முடியாது. நல்லவர்கள் கையில் ஆட்சி கிடைத்தால் மக்களுக்கு நல் லது நடக்கும். சு. வெங்கடேசனைப் போன்றவர்கள் கையில் அரசியல் பலத்தைக் கொடுத்தால், ரயில் சரி யான நேரத்துக்குப் போய்ச்சேரும், தாகம் தீரும், அனைவருக்கும் கல்வி கிடைக்கும். கல்விதான் நமது பலம்.
இங்கே நாம் செய்துகொண்டி ருக்கும் நல்லவைகள் நாடெங்கும் பரவ வேண்டும் என்பதுதான் என் ஆசை. செய்யவில்லை என சுட்டிக் காட்டுவதை விட செய்திருக்கி றோம் என சுட்டிக்காட்ட வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, இல வசப் பேருந்துப் பயணம். பெண்கள் தங்கும் விடுதிகள், தொழிற்சாலை கள் என தமிழ்நாட்டில் திமுக செய்த வைகள் ஏராளம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் வேலை செய் யும் பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார் கள். நல்ல அரசியல் இருப்பதால் தான் இது சாத்தியமாகியுள்ளது.
தமிழகத்திற்கு ஏன், இந்த ஓரவஞ்சனை?
குஜராத், உத்தரப்பிரதேசம், மேங்கு வங்கம் உள்ளிட்ட மாநி லங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை யை உருவாக்க முடிந்த உங்க ளுக்கு (ஒன்றிய பாஜக அரசுக்கு), இங்கே ஏன் உருவாக்க முடிய வில்லை? செங்கலைக் காட்டிய தும், கட்டாத கட்டடத்தின் அஸ்தி வாரம் ஆடிப்போனது. பிற மாநி லங்களில் அத்தனை பணிகளை யும் நிறைவு செய்துவிட்டு, தமிழ கத்துக்கு ஒரவஞ்சனை செய்வது ஏன்? ஒன்றிய அரசிடம் நாங்கள் ஏதாவது கொடு என்று சொல்ல வில்லை எங்களுக்கு சேர வேண்டி யதை கொடு என்றுதான் சொல்கி றோம். அண்ணா சொன்னபடி, தமி ழகம் தேய்ந்துகொண்டுதான் இருக் கிறது. அது தேயாமல் இருக்கும் கேடயமாக சு.வெங்கடேசன் போன் றவர்கள் இருக்கிறார்கள். நல் லவை தொடர வேண்டும் என்றால், இவருக்கு வாய்ப்புக் கொடுத்தே தீர வேண்டும். மதுரைக்கு கிடைக் கும் லாபம், எனது லாபம். இப்படி நினைத்தால்தான் நாளை நமதா கும்.
உள்ளத்திலிருந்து வந்த வசனங்கள்
‘‘உங்களுக்கும் பொதுவுடமை சித்தாந்தத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கலாம். ‘அன்பே சிவம்’ படத்தில் வரும் வச னங்கள் அனைத்தும் என் உள்ளத் தில் இருந்தவை. அந்த படத்தில் மாதவன், ‘சோவியத் யூனியனி லேயே கம்யூனிசம் அழிந்துவிட் டது’ என்று என்னிடம் கூறுவார். அப் போது ‘தாஜ்மஹாலை இடித்து விட்டால், நீங்கள் காதல் செய் வதை நிறுத்தி விடுவீர்களா?’ என நான் அவரிடம் கேட்பேன். கம்யூனி சத்தை காரல் மார்க்ஸ் புத்தக வடி வில் கொண்டு வருவதற்கு முன் னரே, ரோமாபுரியில் ஸ்பார்ட்ட கஸ்-க்கு அது உணர்வாக பொங்கி விட்டது. அது போர் வடிவம் கொண் டது. அது புத்தக வடிவமானது காரல் மார்க்ஸ் வந்த பின்பு தான்.
அதை வெளியிடும் பெருமை யை எனக்குத் தந்தார்கள் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி அதிகாரம் இவர் போன்ற நல்லோர்க்கு கிடைத்தால் அது நிச்ச யம் நன்றாக இருக்கும். அந்த வகை யில் தோழர் சு. வெங்கடேசனுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் முத்திரையிட்டு வெற்றி பெற செய் யுங்கள்.’’
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
புரளிகளைப் பரப்பி மக்களைப் பிரிக்க முடியாது
இன்றைக்கு பல்வேறு புரளி களைச் சொல்லி மக்களை பிளவு படுத்த நினைக்கின்றனர். மதுரை யில் நின்று சொல்கிறேன் இந்திய எம்.பி.களிலேயே தான் செய்த பணிகளை புத்தகமாக அச்சிட்டு ஐந்தாண்டுகளில் 150 வெற்றிகள் என்று வெளியிட்டுள்ளார் சு. வெங்க டேசன். மக்கள் ஊழியம் என்ற ஆவ ணப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.