மதுரையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு 68 சதவீதம் பேர் வரவில்லை
மதுரை, ஆக. 6- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக மத்திய ஆயுதப்படையில் உதவி கமாண்டர் பணியி டத்திற்கு தேர்வானது ஞாயிறன்று நாடு முழுவதும் நடை பெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் சுமார் 905 பேர் காலை மாலை என இரண்டு தேர்வுகள் எழுதுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் விண்ணப்பம் செய்து தகுதி பெற்ற 905 பேரில் 287 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும் சுமார் 618 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சின்னாளப்பட்டியில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
நிலக்கோட்டை, ஆக.6- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த மீன் சந்தையில் பத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன, இங்கு பாறை, கெண்டை, கெளுத்தி, இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட கடல் மற்றும் ஆற்று மீன் வகைகள் திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் இருந்து மொத்தமாக வியாபாரிகளிட மிருந்து வாங்கி வந்து இங்கு சில்லறை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு கெட்டுப்போன பழைய மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதி காரிகளுக்கு வந்த தொடர் புகாரை அடுத்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை .மாவட்ட மீன்வள ஆய்வா ளர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் மீன் சந்தை யிலுள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப் போன நிலையில் இருந்த சுமார் 200-கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அம்மீன்களை பேரூ ராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் குழிவெட்டி புதைத்தனர் அழுகிய மீன்களை விற்பனை செய்த வியா பாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜாபர்சாதிக் மீண்டும் இது போன்ற தவறு நடக்க கூடாது எனவும், மொத்தமாக மீன்கள் வாங்கும் இடத்தில் ஆய்வு செய்து சோதனையிட்டு நல்ல மீன்களை மட்டும் வாங்கி வருமாறு அறிவுறுத்தினார். மேலும் விற்பனை செய்வதற்கு உரிய உரிமம் பெற்று அதற்கான சான்றிதழை கடைகளில் வைத்திருக்க வேண்டும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
மின்வாரியத்தின் அலட்சியத்தால் நத்தத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
நத்தம், ஆக.6- மதுரை மாவட்டம் மேலூர் அருகே எட்டிமங்கலத்தை சேர்ந்தவர் நாச்சான். இவரது மனைவி பேச்சி (60). இவர் சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந் நிலையில் ஞாயிறன்று காலையில் நத்தம் வாரச்சந்தை யில் நல்லாகுளம் கரை பகுதியில் காய்கறி வியாபா ரத்திற்காக வந்தார்.அப்போது அருகில் இருந்த மின் கம்பத்தின் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்தவ ரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். மின்வாரியத்தின் அலட்சியத்தால் கடந்த ஒரு மாத காலத்தில் ஒரு பெண், 3 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி உயிரி ழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நத்தம் பகுதியில் நாளை மின்தடை
நத்தம்,ஆக.6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உப மின் நிலையத்தில் மாதாந் திர பராமரிப்பு பணிகள் நாளை (08-08-2023) செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம் பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திரா பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம் பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் விநியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மழையின்றி நீர்வரத்து இல்லை: சரிந்து வரும் வைகை, பெரியாறு நீர்மட்டம்
தேனி, ஆக.6- மழையின்றி நீர் வரத்து இல்லாததால் வைகை, முல்லைப்பெரியாறு அணை களின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கியபோதும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இத னால் மேற்கு தொடர்ச்சி மலையில் உரு வாகும் ஆறுகள் வறண்டன. குறிப்பாக அர சரடி, வெள்ளிமலை, வருசநாடு, கண்டம னூர் பகுதியில் மழை இல்லாததால் மூல வைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே வைகை அணைக்கு நீர் வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து ஞாயிறு காலை நில வரப்படி 48.52 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.30 அடியாக உள்ளது. 176 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு 400 கன அடி. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப் பாறை அணையின் நீர்மட்டம் 72.95 அடி யாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடி யில் மட்டும் 0.2. மி.மீ. மழை அளவு பதி வாகி உள்ளது.
விலை உயர்ந்து வரும் ஏலக்காய் மகிழ்ச்சியில் விவசாயிகள்
தேனி, ஆக.6- விளைச்சல் குறைவாக இருக்கும் நிலையில் ஏலக்காய் விலை உயர்ந்து வரு வதால் ஏல விவசாயிகள் வருத்தம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளனர். போடி, தேவாரம், கம்பம், கூடலூரை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் பல்லா யிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் பயிரி டப்பட்டு வருகிறது. இங்கு விளையும் ஏலக்காய் ஸ்பைசஸ் போர்டு ஏலக்காய் வர்த்தக மையம் மற்றும் பல்வேறு தனியார் மையங்கள் மூலம் காய்கள் ரகம் பிரிக் கப்பட்டு ஏலம் விடப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன் பின் பல்வேறு ரகங்களாக பிரிக்கப்பட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக் கும், அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய் யப்படுகிறது. தென்மேற்கு பருவக்காற்று பொய்த்த நிலையில் ஏலக்காய் விளைச்சல் குறைந் துள்ளது. விலை அதிகரிப்பு கடந்த மாதம் வரை முதல் ரகம் சார்ந்த ஏலக்காய் கிலோ ரூ.1800 வரை விற்கப் பட்ட நிலையில் கடந்த 10 தினங்களாக கிலோ ரூ.600-லிருந்து ரூ.800 வரை உயர்ந்து தற்போது ரூ.2400 முதல் ரூ.2600 வரை விற்கப்படுகிறது. கிலோ ரூ.1200 முதல் ரூ. 1400 வரை விற்கப்பட்ட ரகம் பிரிக்கப்படாத ஏலக்காய் தற்போது ரூ.1800 முதல் ரூ. 2,100 வரை விற்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் தாண்டி விற்ற நிலையில் கடந்த இரண்டு ஆண்டு களாக ஏலக்காய் விலை கடும் சரிவை சந்தித்து வந்தது. தற்போது 2 ஆண்டு களுக்குப் பின்பு ஏலக்காய் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.2 ஆயிரம் தாண்டி விற்பனை யாவதால் ஏல விவசாயிகளுக்கு வருத் துத்துடன் கூடிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்களை தாக்கி விரட்டிய இலங்கை கடற்படையினர்
இராமேஸ்வரம், ஆக.6- இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை யினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடா மல் விரட்டியடித்தனர். இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வ ரத்தில் இருந்து சனிக்கிழமையன்று மீன் வளத்துறை அனுமதி பெற்று 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென் றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற் படையினர்,தமிழக மீனவர்கள் மீது பாட்டில் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்த னர். மேலும் 20 க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் வலைகளை கடலில் வெட்டி விட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதனால் மீன வர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யிலே கரை திரும்பினர். இதனால் படகுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பி யதாக மீனவர்கள் வேதனையுடன் தெரி வித்தனர். ஒன்றிய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தரமற்ற சாலையால் மக்கள் அவதி போராட்டத்திற்குப்பின் சீரமைப்புப்பணி
சின்னாளப்பட்டி, ஆக.6- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பிரிவு முதல் பேருந்து நிலைய நுழைவு வாயில் வரை தமிழக நெடுஞ்சாலை துறை யினர் சுமார் 6.50 கோடி ரூபாய் மதிப்பில் சாலை விரிவாக்க பணிகளை செய்து வந்த னர். இந்த சாலை பணியால் பொதுமக்கள் வர்த்தக வியாபாரிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ சர அவசரமாக போடப்பட்ட சாலை பணி முடிவுற்றது. இந் நிலையில் பூஞ்சோலையில் ரீகல் கடை அருகில் ஒரு முதியவர் கீழே விழுந்த தால் அந்த வீடியோ வைரலாக பரவியது.இதையடுத்து திமுகவினர் போராட்டம் நடத்த நகரச் செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் திரண்டனர். உடனடியாக தலையிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் அனைத்து சாலைகளையும் உடைத்து மீண்டும் விரிவாக்க பணியை தொடர்வ தாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர் இதில் நகரப் பொருளாளர் எஸ்.ஆர்.முரு கன். பேரூராட்சி தலைவர் பிரதிபா கனக ராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டையில் இன்று நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
விருதுநகர், ஆக.6- அருப்புக்கோட்டையில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 அன்று நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற வுள்ளது என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறி யதாவது: விருதுநகர் மாவட்டத் தில் கைத்தறி துறையின் கீழ் 52 நெசவாளர் கூட்டுறவு சங் கங்கள் இயங்கி வருகின் றன. இதன் மூலம் 6 ஆயிரம் நெசவாளர்களுக்கு தொட ர்ந்து வேலை வாய்ப்பு வழங் கப்பட்டு வருகிறது. இதில், பருத்தி இரக சேலைகள், செயற்கைப் பட்டு சேலைகள், லுங்கிகள், வேட்டிகள், அரசின் விலை யில்லா சேலை, விலையில்லா காடா துணி இரகங்கள் நெசவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன் னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் 9 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு அருப் புக்கோட்டையில் ஆகஸ்ட் 7 அன்று முழுத்தேங்காய் பாலி தார் திருமண மண்டபத்தில் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதில், பொது மருத்து வம், பல் மருத்துவம், இரு தயநோய் சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பொது மக்கள் அதில் கலந்து கொண்டு பயன்பெற வேண் டும். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.
தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு
இராமநாதபுரம், ஆக.6- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தையல் தைக்க தெரிந்த தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் 1.வரு மானச் சான்று ரூ.72 ஆயிரத்திற்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்), இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேசன் கார்டு), தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்தி டமிருந்து பெறப்பட்டது) (6மாத கால பயிற்சி), வயது சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, சாதிச் சான்று, கடவுச் சீட்டு (Passport Size Photo) அளவு மனுதார ரின் கலர் புகைப்படம்-2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆத ரவற்றோர், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை. மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை இராமநாதபுரம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், அலுவலகத்தில் 15 .09.2023க்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.