சிவகங்கை, மே 25- சிவகங்கை மாவட்டம் அழ கப்பா பல்கலைக் கழக திறன் மேம் பாட்டு நிறுவனத்தின் சார்பில் நவநாகரீக ஆடை வடி வமைப்புகளில் முப்பரிமாண அச்சிடுதலின் பங்களிப்பு பற்றிய கருத்தரங்கம் பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடை பெற்றது மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் முத்துக்குமரன் வர வேற்றார். துணைவேந்தர் ரவி பேசுகையில், துறையில் உள்ள புது மையான தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நவநாகரீக வடிவ மைப்பியல் துறை வெகுவாக வளர்ந்து வரும் ஒரு துறை. நாட்டின் தொழில் வளர்ச்சியில் இதன் பங்க ளிப்பு குறிப்பிடத்தக்கது. அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கும் துறையாகவும் இது விளங்குகிறது. முப்பரிமாண அச்சிடுதல் தொழில்நுட்ப ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்பியலி லும் குறிப்பிடத்தக்க பங்காற்றிவரு கிறது. இந்த தொழில்நுட்பத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் உப யோகப்படுத்தப்பட்டு மாதிரிகள் உருவாக்கப்படுகிறது 3டி கிராப்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷால் சிவகுமார் விளக்கிப் பேசினார். நவநாகரீக ஆடையை வடிவ மைப்பியல் துறை மாணவர்கள் 200 பேர் பங்கேற்றனர். உதவி பேரா சிரியர் மகேஷ் நன்றி கூறினார்.