சென்னை,டிச.8- கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா. இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அன்று மாணவி பாத்திமா தான் தங்கி இருந்த விடுதி அறையில் சந்தேகத்துக்கு இடமாக தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து முதலில் கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்பை விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ. காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று அப்துல் லத்தீப் சென்னை பெசன்ட்நகர் ராஜாஜி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். காலை 10.30 மணியிலிருந்து சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.