districts

img

கல்வாரியில் இடுக்கி மாவட்ட பொன்விழா கொண்டாட்டங்கள்

செறுதோணி, ஜன.24- இடுக்கி மாவட்டத்தின் 50ஆவது ஆண்டு விழா வண்ண மயமான  நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கல்வாரிமவுண்ட் 10 நாள் கற்றல் மற்றும் பொழுதுபோக்கு கொண்டாட்டங் களை நடத்தும். பொன்விழா கொண்டாட்டங்களை அமைச்சர் ரோஷி அகஸ்டின் துவக்கி வைத்தார். கல்வாரி மவுண்ட் சந்திப்பில் இருந்து துவங்கிய மாபெரும் கலாச்சார ஊர்வ லத்துடன் தொடக்க அமர்வு தொடங்கியது. கல்வாரி மலை யின் சுற்றுலாத் திறனைப் பயன்படுத்தி, இடுக்கிக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பொன்விழாவை யொட்டி, சுற்றுலா விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் வி.என்.வாசவன், வி.அப்துர்ரஹ்மான், நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸ், சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் ஆசிப் அலி, ஜோஜு ஜார்ஜ், ஒலிம்பிக் நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் வெவ்வேறு நாட்களில் விழாவுக்கு வருகைதர உள்ளனர். கரோல்கள், மெகாஷோக்கள், கலவை இசை நடன மாலை கள், நாட்டுப்புற பாடல்கள், கருத்தரங்குகள், உள்ளூர் கலை நிகழ்ச்சிகள், மாரத்தான் சைக்கிள் பேரணிகள் போன்றவை நடைபெற உள்ளன. டூரிஸம் கிளஸ்டர் டிராவல், ஆஃப் ரோடு ட்ரெக்கிங், பண்ணை சுற்றுலா வருகைகள், கண்காட்சி சந்தைப்படுத்தல் அரங்குகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி ஆகியவை இடம்பெற உள்ளன. துவக்க நிகழ்ச்சிக்கு கமாட்சி ஊராட்சி தலைவர் அனு மோள் ஜோசப் தலைமை வகித்தார். பொது கன்வீனர் ரோமி யோ செபாஸ்டியன் வரவேற்று பேசினார். ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜி சந்திரன், ஜார்ஜ் மாரிபட், அனில் கூவப்பல கால், கே.ஜி.சத்யன், ஆர்.மணிக்குட்டன், சாஜன் குன்னல், சுரேஷ் கோட்டைக்காத், ஷாஜி நெல்லிபரம்பில், ரெஜி முக்கட் உள்ளிட்டோர் பேசினர்.